"நாம் ஆர்டர் செய்தது வரும் வரை, இப்படிதான் அடுத்தவர்கள் டேபிளை ஸ்டைலாக நோட்டம் விட வேண்டும்" - ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படம்..!
இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த படம் இறுதிச்சுற்று இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ரித்திகா சிங் இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டன.
இது மட்டுமல்லாது விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்திலும் மற்றும் லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சிவலிங்கா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்பொழுது அவர் வணங்காமுடி படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். ரித்திகா சிங் இதுவரை நடித்த படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத நிலையில் ஓ மை கடவுளே படத்தில் லிப்-லாக் காட்சியில் நடித்து அசத்தினார்.
சமீப காலமாக அவர் போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு தனது கவர்ச்சி புகைப்படங்களை
வெளியிட்டு வருகிறார் இதனை சற்றும் எதிர்பாராத அவரது ரசிகர்கள், ரித்திகா
சிங்கா இப்படி கவர்ச்சியாக இருக்கிறார் என ஷாக் ஆகித்தான் போனார்கள.
தற்போது, "நாம் ஆர்டர் செய்தது வரும் வரை இப்படிதான் அடுத்தவர்கள் டேபிளை ஸ்டைலாக நோட்டம் விட வேண்டும்" என்று கூறி ஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருக்கிறார்.
"நாம் ஆர்டர் செய்தது வரும் வரை, இப்படிதான் அடுத்தவர்கள் டேபிளை ஸ்டைலாக நோட்டம் விட வேண்டும்" - ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
April 26, 2020
Rating:
