நடிகை ரெஜினா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்த நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் 1988-ல் பிறந்த தெலுங்கு வம்சத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.பிறகு தெலுங்கு சினிமாவில் ‘சிவா மனசுல சுருதி’ என்ற படத்தின் மூலம் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பெஸ்ட் ஃபீமேல் நடிகைகளில் முதல்வராக சீமா விருதை வாங்கினார்.
பிறகு 2013 இல் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடித்த படத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் அறிமுக நாயகி ஆக நடித்தார். படத்தில் இவருடைய நடிப்பு வித்தியாசமாக எதார்த்தமாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் இவருக்கு முக்கிய படமாகவே கருதலாம் ஏனென்றால் இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சந்திரமௌலி, சரவணன் இருக்க பயமேன், போன்ற தமிழ் படங்களில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
இவரது நடிப்புத் திறமையை பார்த்த செல்வராகவன் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்தார். இந்த படம் போதிய அளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றி அடையவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ரெஜினா நிறைய குத்தாட்ட பாடல்களுக்கு டான்ஸ் ஆட தொடங்கினார். இது குத்தாட்ட பிரியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பிறகு இவருக்கு போதிய வாய்ப்பு தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் கிடைக்காததால், மீண்டும் தனது நடிப்பு திறமையின் வெளிப்படுத்த வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிடுவதில் ஆர்வம் மிகுந்தவர்.
தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.