பிக்பாஸ் வீடு மோசமானது - போட்டியாளர்களுக்கு இது தான் நடக்கும் - முன்னாள் போட்டியாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 55 நாட்களை கடந்து இறுதியை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மொழிகளில் நடைபெற்று வருகிறது. 

சர்ச்சைகள், எதிர்ப்புகள் இருந்தாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்துள்ளது. அண்மையில் வந்துள்ள கோமாளி படத்தில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெட்ஜ். 


இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும் கூட. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் தான் போட்டியாளராக இவர் சென்றார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முடியவே முடியாது. பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் இல்லை. 


ஆனால், அந்த இடம் ஒருவரை அவருக்கு பிடிக்காததை பல விஷயங்களை அவருக்கு எதிராகவே செய்யும் நிலைக்கு தள்ளும். நிச்சயமாக பிக்பாஸ் கெட்டது, நம்மை பெரிதாக தூண்டிவிடும். நேர விரயம் மற்றும் மன இறுக்கம் தான் மிச்சம் என கூறியுள்ளார் சம்யுக்தா.
Previous Post Next Post
--Advertisement--