தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகர் மோகன் லாலுடன் மலையாள படம் ஒன்றில் நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன்.
மகாநடிகை படத்தின் படப்பிடிப்பில் கதை, சினிமா என்பதையெல்லாம் தாண்டி மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் மிகப்பெரிய ரசிகை.
பாலிவுட்டில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட் மிகவும் பிடித்தவர்கள். நயன்தாராவின் ‘டிரெஸிங் சென்ஸ்’, சிம்ரனின் நடனம் பிடிக்கும்.
ஒருமுறை, பிரபல நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலை கொடுத்தார். அதை திறந்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றும் என்னை காதலிக்கிறேன் என்று அவர் எழுதியிருந்த ஒரு கடிதமும் இருந்தது.
நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Tags
keerthy suresh