நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர்.
அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி மற்றும் வடசென்னை போன்ற படங்கள். உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல வலிகளும் உள்ளது.
இந்நிலையில், "முறிந்த சிறகுகள்" என்ற தலைப்பி கவிதை தொகுப்பு ஒன்றை எழுதியுள்ளார். தன் சமூகம் பற்றிய வரலாறையும் அவர் புத்தகமாக எழுதவுள்ளராம்.
சமீபத்தில், பெங்களூரில் நடந்த கவிதை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர் சில கவிதைகளை வாசித்திருக்கிறார். அதில் சோகம் அதிகமாக இருக்க என்ன காரணம் அவரை கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு ஆண்ட்ரியா அளித்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணமான ஒரு நபருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தை துயரத்தை அடக்க முடியாமல் எழுதிய வரிகள்கள் தான் இவை என்றும் சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடலளவிளும்ம், மனதளவில் மிகும் பாதித்திருந்தது என கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா தொடர்பு வைத்திருந்த திருமணமான அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
Tags
Andrea Jeremiah