பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேற்றப்பட்டிருக்கும் மீரா மிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தால் அவரிடம் இருந்து மிஸ்.சவுத் இந்தியா பட்டமும் திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, அழகிப் போட்டி நடத்துவதாக கோசடி செய்த மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே போலீஸ் அவரை விசாரித்தது.
அங்கேயே அவர் கைது செய்யப்படுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், தன் மீது போலீசில் புகார் அளித்த ஜோ மைக்கேல் என்பவரை கொலை செய்ய மீரா மிதுன் திட்டம் போட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தனது நண்பர் ஒருவரிடம் போனில் கோபமாக பேசும் மீரா மிதுன், “ஜோ மைக்கேல் கால், கையை உடைத்து ஆறு மாதங்கள் பெட்டில் போட்டுவிடலாமா அல்லது கொலை செய்து விடலாமா, அப்போது தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்” என்று கூறுகிறார்.
தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சில வழக்குகளை எதிர்கொண்டு வரும் மீரா மீதுன், இந்த போன் உரையாடல் மூலம் பெரிய அளவில் சிக்கலில் சிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து போலீசில் ஜோ மீண்டும் புகார் அளித்தால், கொலை முயற்சி வழக்கில் மீரா மிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குனர்கள் , நடிகர்களிடம் மீரா மிதுன் பேசிய காம உரையாடல்கள் உள்ளன. அதனை வேண்டிய நேரத்தில் ரிலீஸ் செய்வோம் என்றும் மீரா மிது குற்றம் சாட்டுபவர்கள் கூறுகிறார்கள்.
யாராவது அவரது எதிரிகள் அவரை பிரச்சினையில் சிக்க வைக்க, இதுபோன்ற வேலையை பார்த்தார்களா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை நடத்தினால் தான் இந்த விவகாரத்தின் உண்மை தெரிய வரும்.
Tags
meera mithun