தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான‘சிந்து சமவெளி’ என்ற கோக்குமாக்கான படத்தில் நடித்து ரசிகர்களின் மனசுல பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட நடிகை அமலாபால் நாளுக்கு நாள் செய்து வருகிற அலம்பல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
அவர் எந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் பண்ணாலும் அது சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 2017ல் விவாகரத்து செய்து விட்டார்.
இந்நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.
அதன் பின்னர் தான் ஒரு நபரை காதலிப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அமலா பால். இப்படி சர்ச்சைக்கு பாஞ்சமே இல்லாத அமலா பால் சமீபத்தில் `ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மேலும் தனது சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்நிலையில், மரத்தடியில் நின்று கள் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு " நேரடியாக மரத்திலிருந்து வந்த கள் " என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அமலா பாலை விளாசி வருகிறார்கள்.
Tags
Amala Paul