விபச்சார வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டு பிறகு இனிமேல் இது போன்று விபசாரத்தில் ஈடுபடமாட்டேன். குடும்ப சூழல் காரணமாகவே இப்படி தவறான பாதையில் சென்றேன் என்று விளக்கம் அளித்தார் நடிகை ஸ்வேதா பாசு.
பிறகு, நன்னடத்தை காரணமாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்தார். இப்போது, மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சிறையிலிருந்து வந்த பிறகு அவர் முதல் முறையாக ஒரு இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தப் பாடலில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் சம்மதித்துள்ளாராம் ஸ்வேதா.
இந்தப் பாடலுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கியுள்ளார். இது தவிர ஒரு இந்திப் படத்தில் நாயகியாக நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாம்.
தெலுங்கில் சில வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை இப்போதைக்கு ஒப்புக் கொள்ளாத ஸ்வேதாபாசு, இந்தி வாய்ப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். மேலும் தனது நண்பர் நடத்தும் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை கவனித்து வருகிறார்.
Tags
Swetha Basu