டிவிட்டரில் குழாயடி சண்டை போடும் கஸ்தூரி - வனிதா - கொடும கொடும - தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்


பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா பற்றி விமர்சித்த வனிதாவை வாத்து என மீண்டும் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி. இதனால் சமூகவலைதளத்தில் கஸ்தூரிக்கும், வனிதாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, டீச்சர் டாஸ்க்கில் வனிதாவை கஸ்தூரி வாத்து எனக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கமல் முன்னிலையிலும் பஞ்சாயத்துக்கு வந்தது. 

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வப்போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது இருவருமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர். 

ஆனாலும் அவர்களுக்கிடையேயான மோதல் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கவின் வெளியேற்றம் தொடர்பாக லாஸ்லியாவை விமர்சித்து கமெண்ட் வெளியிட்டார் வனிதா. 

அதனை விமர்சிக்கும் வகையில் கஸ்தூரி வெளியிட்ட பதிவில், ' என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா !' என அவர் தெரிவித்திருந்தார். 

கூடவே அதில், ஒரு வாத்து எமோஜியையும் அவர் பதிவிட்டிருந்தார். இதனை நெட்டிசன் ஒருவர் வனிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டார். இதனால் ஆவேசமான வனிதா, கஸ்தூரிக்கு பதிலடி தரும் வகையில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். 

கஸ்தூரியும் விடாமல் அதற்கு பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் சமூகவலைதளத்தில் கஸ்தூரிக்கும், வனிதாவிற்கும் இடையே குழாயடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொடும கொடும என தலையில் அடித்துக்கொண்டது தான் மிச்சம்.



Previous Post Next Post
--Advertisement--