என்ன கன்றாவி இது..? - அமலாபாலின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்..!


“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார்.

மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார்.

கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மேயாதமான் இயக்குனர் இயக்கிய "ஆடை" என்ற படத்தில் ஆடையின்றி நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.

ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர். இந்நிலையில், கவர்ச்சி உடையில் கட்டிலில் அமர்ந்தபடி தனது செல்ல நாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால். மேலும், தனது முடியை பாதியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,

Previous Post Next Post
--Advertisement--