நடிகை யாஷிகா ஆனந்த் வந்த கார் மோதி விபத்து - இளைஞர் படுகாயம்..! - அதிர்ச்சி தகவல்கள்


சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் பலத்த காயமடைந்தார். 

ஓட்டல் உணவை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வரும் பரத் என்பவர் நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரம் நள்ளிரவில் நின்றுகொண்டிருந்தார். 

அப்போது, அவ்வழியாக மிக வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அவர் மீது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் அங்கிருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த பரத், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் அந்த காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாக அங்கிருந்து அவர் சென கூறப்படுகிறது. 

மேலும் காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.அதேவளை, நடிகை யாஷிகா ஆனந்த் மது அருந்தியிருந்தாரா..? என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

பிரபல நடிகை ஒருவர் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் காட்டு தீ போல பரவி வருகிறது.

Advertisement