7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்த தொகுப்பாளினி பிரியங்கா - தொகுப்பாளினி ஆகவில்லை என்றால் இந்த வேலைக்கு தான் சென்றிருப்பாராம்..!


பிரபல தொகுப்பாளினி பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். 

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். சிறு வயதிலிருந்தே மீடியா துறை பிடிக்கும் என்பதால், அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறார். 

இந்நிலையில், தொகுப்பாளினியாக பிறகு “சூப்பர் சிங்கர் 5” ரியாலிட்டி நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் பிரவீனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

இவருடைய வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்னவென்றால், இவர் 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் விமான பணிப்பெண் ஆகியிருப்பாராம். 

அவரை பல தடவைகள் நேர்காணலில் கூறியிருக்கினார். இதேவேளை, பிரியங்காவுக்கு பயணமும், தென்னிந்திய உணவுகளும் மிகவும் பிடித்தமானவைகளாம்.