"புடவை மேல ஜாக்கெட்.. என்ன கன்றாவி டா இது..?" - சின்னத்தம்பி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


குடும்ப பெண்ணாக அழகாக சேலை கட்டிக் கொண்டு தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் பவானி ரெட்டி. இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார். 

ஒயிலான நடைக்கும், ஸ்டைலான இடைக்கும் பேர் போனவர். மாடலிங் துறையில் தன்னுடைய விழியசைவினால் பல இளைஞர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்தவர். 

தெலுங்கில் அப்படியே சீரியல் பக்கம் ஒதுங்கி, சீரியல்களில் தன்னுடன் நடித்த பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இருவருக்குமான பிரச்சனையில் கடந்த 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துக் கொண்டார். 

அதன் பிறகு நடிகை பவானி தமிழ் சீரியல்கள் பக்கம் ஒதுங்கினார்.தற்போது குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை மறுமணம் செய்திருக்கிறார் பவானி ரெட்டி. ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் கலை சேவை செய்ய தவறுவதேயில்லை. 

இங்கே தமிழ் சீரியல்களில் தான் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறார். அக்கட தேசத்தில் இன்றும் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை பவானி ரெட்டி மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்ததால், இதெல்லாம் பெரிய கவர்ச்சி ஒன்றும் இல்லை என்று தத்துவமும் பேசுகிறார். 

தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே கவர்ச்சியாக திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது புடவை மீது ஜாக்கெட் அணிந்தது போன்று ஒரு மாடல் ஜாகெட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,புடவை மேல ஜாக்கெட்.. என்ன கண்றாவிடா இது..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Previous Post Next Post
--Advertisement--