"எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் எழுப்பி விடுங்கள்" - இரட்டை அர்த்த வசனத்தை கூறி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா..!
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார்.
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருந்தார் தமன்னா. இந்த படம், கடந்த நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் தமன்னாவின் கவர்சிக்காவே மூன்று நாட்கள் ஓடியது.
முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். என்னதான் செம்மையா நடிச்சாலும் சரியான முறையில் படங்கள் அமையாததால் மன வருத்தத்தில் இருந்தார் தமன்னா.
நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒருகாலத்தில் கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர் நடிகை தமன்னா.
தற்போது நடிகை தமன்னா 'த நவம்பர் ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் இவர் தற்போது இரட்டை அர்த்த வசனம் ஒன்றை பதிவிட்டு பீன் பேக் மீது படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், " எல்லாம் முடிந்த பிறகு எழுப்பி விடுங்கள் " என்று கூறியுள்ளார். அதாவது, கொரோனா பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு என்னை எழுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், நெட்டிசன்கள் இதை வேறு மாதிரி புரிந்து கொண்டு கமென்ட் செக்ஷனை நாறடித்து வருகிறார்கள்.
"எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் எழுப்பி விடுங்கள்" - இரட்டை அர்த்த வசனத்தை கூறி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா..!
Reviewed by Tamizhakam
on
June 01, 2020
Rating:
