"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்..." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் அறிமுகமானாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடிகை புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா.
அதன்பின் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரலையாக பாட்டு பாடியும் வருகிறார். சமீபத்தில் வெளியாக அவெஞ்சர்ஸ் என்ட் கேம் ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்ற நடிகைக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆன்ந்தம் பாடலை இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாடி வெளியிட்டார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் அம்மணி.
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு திருமணமான ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன் என்றும் அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
அவர் கூறிய அந்த திருமணமான நபர் பிரபல அரசியல் வாதி ஒருவரின் மகனும், நடிகருமான ஒருவர் தான் என்று தகவல்கள் கசிந்தன. இந்த பரபரப்பு சற்றே அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
தற்போது, நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் வீட்டிலேயே கேக் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரித்து அதனை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது பிஸ்கட் ஒன்றை தயாரித்து அதனை சாப்பிடுவது போல போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்..." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 07, 2020
Rating:
