"வேடிக்கை பாக்குறதோட நிறுத்திக்கோங்க..!.." - திடீர் போராளிகள் கருத்து - சாட்டை சுழற்றிய சச்சின்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்திய போது, அது வன்முறையில் முடிந்தது.ஆனால், அரசியல் கட்சியின் பின்புறத்திலிருந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நிலையில், பிரபல சர்வதேச பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால், “சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மூலம் பிரபலங்கள் தெரிவிக்கும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல. இந்தப் போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக பண்பாகவே பார்க்க வேண்டும். அரசும், விவசாயிகளும் இதற்கு ஜனநாயக முறையில் நிச்சயம் தீர்வு காண்பார்கள். இதுபோன்ற பிரச்சினைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இவை குறித்து புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
மேலும், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சுரேஷ் ரெய்னா, ரவிசாஸ்திரி உள்பட இந்தியாவில் உள்ள பிரபலங்கள் வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனால், அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #IndiaAgainstPropaganda, #IndiaTogether என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, சச்சினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
"வேடிக்கை பாக்குறதோட நிறுத்திக்கோங்க..!.." - திடீர் போராளிகள் கருத்து - சாட்டை சுழற்றிய சச்சின்..!
Reviewed by Tamizhakam
on
February 03, 2021
Rating:
