வரிசையாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்த கையோடு, புது பட வேலையை துவக்கி விட்டார் நயன்தாரா. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதுவும் நாயகியை மையமாகக் கொண்ட கேரக்டராம். இந்த படத்துடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறாராம் நயன்தாரா. வெங்கட் பிரபுவிடம் அசிஸ்டென்டாக பணியாற்றிய புதுமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ், ஒரு மாதத்திற்கு முன்பு நயன்தாராவை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறி உள்ளார்.
உடனே நயன்தாராவிற்கு பிடித்து விட்டதாம். நயன்தாரா ஓகே சொல்லி விட்டதால் உடனடியாக முழு கதையையும் ரெடி பண்ணிவிட்டாராம் டைரக்டர். 5 நாட்களுக்கு முன் சென்னையில் ஷுட்டிங்கையும் துவக்கி விட்டார் நயன்தாரா.
நாயகி மையத் திரைப்படங்களில் நயன்தாரா அதிகமாக நடிக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் நெற்றிக்கண் திரைப்படமும் நாயகி மையத்திரைப்படமே. அதில் அவர் பார்வையிழந்தவராக வருகிறார். த்ரில்லாம் ஜானரில் அமைந்த திரைப்படம் அது.
அத்துடன் ரஜினியுடன் அவர் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். இதனை ஜிஎஸ் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதுவொரு த்ரில்லர் திரைப்படம்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே நீண்ட காலம் நிலைக்க முடியும் என்பதை உடைத்தெறிந்து வெற்றி நடை படுபவர் நடிகை நயன்தாரா.
அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நயன்தாரா தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நாள் முழுக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.
0 கருத்துகள்