சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில், ஏழு ஆண்டுகளாக இன்ப-துன்பம் பகிர்ந்து வாழ்ந்த தம்பதியரின் வாழ்க்கை ஒரே நாளில் சின்னாபின்னமாக உடைந்தது.
கணவர் ராமேஷ் சிங் (38), உள்ளூர் அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருபவர். மனைவி சுஜாதா சிங் (34), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கிய ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள்.

கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மாலை, சுஜாதா வீட்டில் இருந்து கிளம்பினார். “உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு போகிறேன். இரவு தாமதமாக வரலாம்” என்று கணவரிடம் சொல்லிவிட்டு, புடவை அணிந்து, செருப்பு மாட்டி, புதிதாக வாங்கிய பிங்க நிற உள்ளாடைகளுடன் வெளியேறினார்.
ஆனால், இரவு 11 மணி ஆனதும் அவர் வீடு திரும்பவில்லை. முதலில் உறவினர்கள், பின்னர் அக்கம் பக்கத்தாருடன் சேர்ந்து ராமேஷ் தேடினார். உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் – எங்கும் இல்லை. கடைசியில் நள்ளிரவில் ராய்ப்பூர் காவல் நிலையத்தின் கதவைத் தட்டினார்.
“என் மனைவி காணவில்லை” என்று புகார் கொடுத்தார். உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சுஜாதா சென்றதாகக் கூறிய உறவினர் திருமண இடத்திற்கு விரைந்தது.
அங்கு விசாரணையில் அதிர்ச்சி: “ஆமாம், அவர் வந்தார். உணவு உண்டார். ஆனால் சீக்கிரமே கிளம்பிவிட்டார்” என்று சொன்னார்கள். மேலும் சிலர் முக்கிய தகவல் கொடுத்தனர்: “அவருடன் கல்லூரி மாணவர்கள் சிலர் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வையும், பேச்சும் சந்தேகமாக இருந்தது.”
உடனடியாக அந்தப் பகுதி சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் பார்த்த காட்சி அதிர்ச்சியளித்தது. சுஜாதா, தன் கல்லூரி மாணவர்களுடன் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது. உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கிய காவல்துறையினர், காட்டுக்குள் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டனர்.
சுஜாதாவின் புதிய பிங்க் நிற ஜட்டி, ப்ரா, புடவை – அனைத்தும் கிழிந்த நிலையில் சிதறிக் கிடந்தன. அவரது செருப்புகள், கைப்பை – எல்லாம் துரத்திச் செல்லப்பட்டது போல் பரந்து கிடந்தன. கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
காவல்துறையினர் அந்த உடமைகளை ராமேஷிடம் காட்டினர். கண்ணீர் மல்க, “இது என் மனைவியின் புடவைதான்… இது அவரது உள்ளாடை… இது அவரது செருப்பு” என்று ஒவ்வொன்றையும் அடையாளம் காட்டினார்.
ஆனால், மர்மம் அங்கு முடியவில்லை. சுஜாதாவின் செல்போன் இன்னும் ஆன் நிலையில் இருப்பதை கண்டறிந்த காவல்துறை, அதில் வேறொரு சிம் கார்டு பயன்படுத்தப்படுவதைக் கண்டுபிடித்தனர். சிக்னல் டிரேசிங் செய்து விரைந்தது தனிப்படை.
மறுபக்கம், சுஜாவின் வீட்டில் ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா? என்று தேடுதல் வேட்டை தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெலிவரி ஆகியிருந்த ஆன்லைன் பார்சல் ஒன்றின் அட்டைப்பெட்டி கிடைத்தது. ஆனால், அதிர்ச்சி. அதில் இருந்த விலாசம் சுஜாதாவுடையது அல்ல. அர்ஜுன் ஷர்மா என்ற பெயரில் டெலிவரி செய்யப்பட்டிருந்தது.
அர்ஜுன் ஷர்மா யார் என்ற கேள்விக்கு ராமேஷிடம் பதில் இல்லை. அர்ஜுன் ஷர்மாவின் விலாசத்திற்கு சென்ற போது மேலும் அதிர்ச்சி, ஆம், அர்ஜுன் ஷர்மாவை காணவில்லை என அவனது பெற்றோரும் புகார் கொடுத்திருந்தனர். இங்கு காவல்துறைக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அர்ஜுன் ஷர்மா படிக்கும் கல்லூரியில் தான் சுஜாதா ஆசிரியையாக வேலை செய்கிறார்.
மாணவன் அர்ஜுன் ஷர்மா சுஜாவின் கள்ளக்காதலன் என்றோ, பிங்க் கலர் உள்ளாடைகளை பரிசாக வாங்கிக்கொடுத்தது கள்ளக்காதலன் தான் என்றோ போலீசுக்கும், சுஜாவின் கணவர் ராமேஷுக்கும் அப்போது வரை தெரியாது.
மறுபக்கம், செல்போன் சிக்னலை தேடிச்சென்ற தனிப்படைக்கு ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு லாட்ஜில், சுஜாதா தன் கல்லூரி மாணவன் அர்ஜுன் ஷர்மா (22) உடன் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.
சுஜாதா தன் மாணவன் அர்ஜுன் மீது காதல் கொண்டிருந்தார். “நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்” என்று அர்ஜுன் சொன்னதும், சுஜாதா ஒரு திட்டம் தீட்டினார். “நான் காணாமல் போனது போல் நாடகம் ஆடினால், என் கணவர் மற்றும் குடும்பத்தார் என்னைத் தேட மாட்டார்கள்.
பின்னர் நாம் சுதந்திரமாக வாழலாம்” என்று முடிவு செய்தார். அதன்படி, திருமணத்திற்குச் சென்ற வேகத்தில் மாணவர்களுடன் காட்டுக்குச் சென்று, தன் உடைகளை கிழித்து சிதற வைத்து, போலி ‘கொலை’ காட்சியை உருவாக்கினார். பின்னர் அர்ஜுனுடன் லாட்ஜுக்கு சென்று தங்கினார்.
ராமேஷ் சிங் காவல் நிலையத்தில் கதறி அழுதார்: “ஏழு ஆண்டுகளாக கட்டிய மனைவியைத் தவிர வேறு யாரையும் கனவில்கூட நினைக்காத எனக்கு இந்த நம்பிக்கை துரோகம் வேண்டுமா? இரவு பகலாக காவல்துறையுடன் சேர்ந்து அவளைத் தேடிக் கொண்டிருந்தேன்… இப்படியா ஒரு முடிவு?”
ஆனால் சட்ட சிக்கல் ஒன்று எழுந்தது. அர்ஜுன் 22 வயது முழு வயது பெரியவர். இருவரும் சம்மதத்துடன் உறவு வைத்திருப்பதால், காவல்துறையினர் எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்ய முடியவில்லை. வழக்கு ‘காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டார்’ என்று முடிவுக்கு வந்தது.
இந்தச் சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகள், ஆசிரியர்-மாணவர் உறவு, நம்பிக்கை துரோகம் – பல கேள்விகளை எழுப்பியுள்ள இந்தக் கதை, இன்னும் பலரின் இதயத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
Summary in English : In Chhattisgarh, a woman teacher left home for a relative's wedding but did not return. Her husband searched with police help. Officers found her clothes in a forest area and later located her in a lodge with a college student. She had planned to start a new life with him. The case ended without charges as both were adults.

