முரட்டு குத்து 3-ம் பாகமா..? – தொடையழகி ரம்பா வெளியிட்ட புகைப்படம்..! -கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

 

அந்த படத்தில் அழகிய லைலா பாடல் இன்று வரை அனைவரும் ரசிக்கும் பாடலாகவே உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தொடையழகி ரம்பா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

---- Advertisement ----

 

தற்போது 3 குழந்தைகளுக்கு தாயாக செட்டில் ஆகியுள்ள ரம்பா, ஒரு காலத்தில் கோலிவுட்டையே புரட்டிப் போட்ட கவர்ச்சி புயல். படவாய்ப்பிற்காக இப்போது எல்லாம் நடிகைகள் தங்களது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கார்த்திக்,அர்ஜூன் , பிரபுதேவா, விஜய், அஜித்,ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் ரவுண்டி கட்டி நடித்துள்ளார். 

 

பால் வண்ணத்தில் கிண்ணென தேகமுடைய ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பட்டத்தை கொடுத்து ரசிகர்கள் அழகு பார்த்தனர். சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த போதே, சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் ரம்பா. 

 

இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், முரட்டு குத்து மூன்றாம் பாகமா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

---- Advertisement ----