Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

19 வயசு நடிகை.. அம்மா.. ஒரே நேரத்தில் இருவரையும் வேட்டையாடிய 62 வயசு நடிகர்..!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் வரை பட வாய்ப்பு வேண்டும் லட்சங்களில் சம்பளம் வேண்டும் என்றால் அந்தப் படத்தை தயாரிக்க கூடிய தயாரிப்பாளர் இயக்குனர் ஹீரோ என அனைவரிடமும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் பட வாய்ப்பு என்ற ஒரு நிலை இருக்கிறது என்பதை நடிகைகளே தங்களுடைய வாயால் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

முன்னணி நடிகைகள் கூட இதனை ஒப்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் போது.. எனக்கு இதுபோல நடந்தது கிடையாது.. ஆனால் எனக்குத் தெரிந்தவர்கள் இது போன்ற பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறும் போது நான் கேட்டிருக்கிறேன். எனவே இப்படி ஒரு விஷயம் சினிமா துறையில் நடக்கிறது. அனைத்து துறைகளிலும் நடக்கிறது என பட்டும் படாமல் பேசுவார்கள்.

குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களில் திரையில் ஒரு நிமிடம் அல்லது ஒரே ஒரு காட்சி தோன்ற வேண்டும் என்றால் கூட இரண்டு அல்லது மூன்று பேரை அனுசரிக்க வேண்டும் என்ற நிலை.

இன்னும் சிலர், சினிமா பின்புலம் இருந்தால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள தேவையில்லை. அவர்கள் சினிமா பின்புலம் மற்றும் அவருடைய தாய் தந்தையரின் உதவியுடன் சினிமாவில் இப்படியான பிரச்சனைகள் இல்லாமல் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்ற மூடநம்பிக்கை வேறு பலர் மத்தியில் இருக்கிறது.

நடிகைகளை பொறுத்தவரை என்னதான் சினிமா பின்புலம் இருந்தாலும் திரை துறையில் பலர் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்களே தவிர, இது போன்ற விஷயங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று தகவல்கள் வெளியாகின்றன.

--Advertisement--

இந்நிலையில், தன்னுடைய மகளின் பட வாய்ப்புக்காக பிரபல நடிகரை அணுகிய நடிகைக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அந்த நடிகருடன் ஜோடியாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இந்த நடிகை, என்றாலும் கூட இவருடைய மகளுக்கும் பட வாய்ப்பு வேண்டும் என்றால் அவருடைய மகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று நேரடியாகவே நடிகர் கேட்டிருக்கிறார்.

ஆனால், அவளுக்கு இப்போதுதான் 19 வயது ஆகிறது. அவளுக்கு பதிலாக நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன். படப்பிடிப்பு முடியும் வரை உங்களை அனுசரித்துச் செல்கிறேன் என்னுடைய மகளுக்கு ஒரு அறிமுகத்தை பெற்றுக் கொடுங்கள் என கேட்டிருக்கிறார் நடிகை.

19 வயது என்றாலும் பார்ப்பதற்கு 25 வயது பெண் போல வாட்டசாட்டமாக இருக்கும் நடிகையின் மீது தீராத ஆசை கொண்டிருந்த அந்த 62 வயது நடிகர் உனக்காக உன் மகளை அறிமுகப்படுத்த சம்மதிக்கிறேன். ஆனால், ஒரே ஒரு முறை உன் மகளுடன் உன் மகள் எனக்கு என்னிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

பல கட்ட யோசனைகளுக்கு பிறகு சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை. இங்கேதான் ஆரம்பித்திருக்கிறது கூத்து. அம்மா சொல்கிறார் என்பதால் இப்படியான விஷயங்களை செய்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்திருக்கிறார்.

எனக்கு இப்படியான சினிமா வாய்ப்புகள் தேவை கிடையாது. என்னை விட்டு விடுங்கள். நீங்கள் எப்படியோ பணம் சம்பாதித்துக் கொண்டு போங்கள். நான் சினிமாவில் இனிமேல் நடிக்கப் போவதில்லை. இப்படியான சம்பளம் எனக்கு தேவையில்லை.

ஆனால் இதுவரை நான் நடித்த சம்பாதித்த பணத்தை எனக்கு கொடுங்கள். அதை வைத்து நான் பிழைத்துக் கொள்கிறேன் என கேட்டிருக்கிறார். மேலும், தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிடும் முடிவில் இருந்திருக்கிறார்.

தன்னுடைய காதல் கணவனுடன் சேர்ந்து வேறு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என தன்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்கள் மற்றும் தன்னுடைய சம்பாத்தியத்தில் இருக்கக்கூடிய பணம் நகை ஆகியவற்றை எனக்கு கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார் நடிகை.

ஆனால், நீ அட்ஜஸ்ட் செய்து கொண்டு தான் படங்களில் நடிக்க வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி நான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உனக்கு வராது.. ஆரம்பத்தில் தான் இப்படி இருக்கும் என்றெல்லாம் நடிகையை மூளை சலவை செய்திருக்கிறார்கள் நடிகையின் அம்மா.

ஒத்து வராத நடிகை உங்களிடம் இருந்து பணத்தை எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியும் என தன்னுடைய தாய் மற்றும் தந்தை மீது வழக்கு தொடுத்து விட்டு தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

தற்போது வரை தன்னுடைய காதலனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தற்போது வெப் சீரியஸ்கள் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தின் பிறந்த வாரிசு என்றாலும் தற்பொழுது ஹிந்தி சீரியல்களில் நடித்து சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்.

ஆனாலும் அந்த அட்ஜஸ்ட்மென்ட் போன்ற எந்த ஒரு விவகாரத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் சொந்த காலில் நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஒரு பேட்டியில், உங்களை போன்ற வாரிசு நடிகைகள் எல்லாம் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார்கள்.. விருது விழாக்களில் ஜொலிக்கிறார்கள்.. கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.. ஆனால்.. நீங்கள் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறீர்களே.. உங்களுக்கு வேதனையாக இல்லையா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை.. அவர்கள் கோடிகளில் சம்பாதித்து.. வேதனையை மறைத்து போலியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆனால், நான் ஆயிரங்களில் சம்பாதித்தாலும் உண்மையான மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என பொட்டில் அடித்தார் போல் பதில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top