‘இருப்பேனோ..? மாட்டேனோ..? தெரியலையே..’ – மனதை கலங்க வைத்த நடிகர் பாலா..!

தமிழ் சினிமா இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சிறுத்தை சிவா. ரஜிீனிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் டைரக்டர் இவர்தான். அஜீத் நடித்த வீரம், விஸ்வாசம் படங்களை இயக்கியதும் இவர்தான். தற்போது சூர்யாா42 என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இவரது தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அன்பு என்ற படத்தில் அறிமுகமானார். வீரம், அண்ணாத்த படங்களிலும் இவருக்கு நடிக்க, அண்ணன் சிவா வாய்ப்பு தந்திருந்தார். தவிர, மலையாள படங்களில் அதிகமாக நடித்து வந்தார் பாலா.

இந்நிலையி்ல், சில தினங்களுக்கு முன் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவர்,. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரலில் அவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன், சிறுத்தை சிவா, அவரது படங்களில் ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் படக்குழுவைச் சேர்ந்த சிலர், பாலாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்து, நலம் விசாரித்து ஆறுதலும் கூறிவிட்டு திரும்பியுள்ளனர்.

மருத்துமனையிலேயே, தனது திருமண நாளை மனைவியுடன் மகிழ்ச்சியாக கழித்த பாலா, மிகவும் நெருக்கடியான உடல் நலம் பாதித்த நிலையில் இருக்கிறேன். முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று, சில தினங்களில் எனக்கு நடக்க இருக்கிறது.

---- Advertisement ----

 அந்த ஆபரேஷனுகக்கு பிறகு, நான் இருப்பேனோ, மாட்டேனோ தெரியாது, என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல இயக்குநரின் தம்பி, பிரபல நடிகரான பாலாவின் இந்த பதிவு, சமூக வலைதளங்களளில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----