பிரபல நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! – பதட்டத்தில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் சரத்பாபு. கடந்த 1980–90களில், பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமானார். அதன்பின், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா என்ற பாடலை பாடியது ஜேசுதாஸ் பாடியது என்றாலும், இந்த பாடல் ஒலிப்பதை கேட்கும் போதெல்லாம், ரசிகர்களுக்கு நினைவில் வருவது சரத் பாபுதான்.

ரஜினி, கமல் படங்களில் நண்பர் கேரக்டர் என்றால் அது சரத்பாபுதான், அண்ணாமலை, வேலைக்காரன், சட்டம் போன்ற பல படங்களில் சரத்பாபு, நடித்திருக்கிறார்..சினிமா வாய்ப்புகள் குறைந்துபோனதால், ஒரு கட்டத்தில் டிவி சீிரியல்களிலும் நடித்து, மக்களின் மனம் கவர்ந்தார் சரத்பாபு.

70 வயதுகளை கடந்துள்ள சரத்பாபுவுக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு,.சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளளார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சரத்பாபு இருந்து வருகிறார்.

சமீபத்தில் சினிமா பிரபலங்கள் மயில்சாமி, டிபி கஜேந்திரன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்., தமிழ் சினிமாவின் முக்கிய மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்பாபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது, தமிழ் திரையுலகினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், நல்ல முறையில் குணமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் என, பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

---- Advertisement ----

---- Advertisement ----