கணவருக்கு தர்ம அடி கொடுத்த நடிகை தேவதர்ஷினி..! – அதிர்ச்சி தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக நடித்து வருபவர் நடிகை தேவதர்ஷினி. துவக்கத்தில், இவர் டிவி சீரியல்களில்தான் நடித்துக்கொண்டிருந்தார். இவர், நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியுடன், ரமணி வெர்சஸ் ரமணி காமெடி தொடரில், மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். கணவன் – மனைவிக்கும் நடக்கும் சண்டைகளை, குடும்ப விஷயங்களை வைத்து, நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட இந்த காமெடி சீரியல், மக்கள் மத்தியில் தேவதர்ஷினிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற தேவதர்ஷினி நடிகர் விவேக்குடன் பார்த்திபன் கனவு படத்தில் நடித்து, சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் படங்களில் அண்ணி கேரக்டர்களில் நடித்து, இப்போது,. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அக்கா, அண்ணி கேரக்டர்களில் அதிகமாக தேவதர்ஷினி நடித்து வருகிறார்.
இவரது கணவர், சேத்தன். இவரும் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல் நடிகர்தான். அப்போதே, சேத்தனும், தேவர்தர்ஷினியும் காதல் திருமணம் செய்துகொண்டனர். சேத்தனும், தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை படத்தில், சேத்தன் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அநியாயங்கள் செய்யும் கொடூர வில்லனாக இந்த படத்தில் சேத்தன் சித்தரிக்கப்பட்டு, அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சேத்தன் கதாபாத்திரம் நடிப்பு என்பதையும் மறந்து, அவரை கண்டபடி தி்ட்டி, வெறுக்கின்றனர்.

அதே போல், தியேட்டரில் இந்த படத்தை சேத்தன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்த்திருக்கிறார். அப்படி படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, சேத்தன் அருகில் அமர்ந்து படம் பார்த்த தேவதர்ஷினி, சில காட்சிகளில் சேத்தன் செய்யும் அட்டூழியங்களை சகிக்க முடியாமல் அவரை, கையால் பலமுறை அடித்திருக்கிறார். மறுபுறம் அமர்ந்திருந்த சேத்தனின் மகளும் அப்பாவை அடித்து, கண்டபடி அடித்திருக்கிறார். மேலும், தேவதர்ஷினியின் நீண்ட கால தோழிகள் சிலர், விடுதலை படம் பார்த்த பிறகு, தேவதர்ஷினிக்கு போன் செய்து, சேத்தனை போன்ற கொடுமைக்கார ஆளுடன் எப்படி, இத்தனை ஆண்டுகளாக குடும்பம் நடத்துகிறாய்? என, தேவதர்ஷினியிடம் கோபமாக கேட்டுள்ளனர்.

இந்த விஷயங்களை எல்லாம், விடுதலை படம் ரிலீஸ் ஆன பிறகு சேத்தன், ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், வெளிப்படையாக கூறி இருக்கிறார். மனைவி, மகள் மற்ற பெண்கள் என பலரும் என்னை கண்டபடி திட்டினாலும், மனைவியும், மகளும் என்னை ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்த போதும், அதற்காக நான் வருத்தப்படவில்லை. சந்தோஷப்பட்டேன். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் எனக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. அவ்வளவு சிறப்பாக அந்த பாத்திரம் அமைய, இயக்குநர் வெற்றிமாறன் தான் முழு காரணம் என்றும் கூறி இருக்கிறார்.

--Advertisement--