நடிகை ஈஸ்வரி ராவ் தங்கச்சி யாரு தெரியுமா..? அட இவங்களா..?

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஈஸ்வரி ராவ்.

இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் பார்க்கப்பட்டார். \

90ஸ் களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக கதாநாயகியாக நடித்து வந்த ஈஸ்வரி 2000 கால கட்டத்திற்கு பிறகு துணை நடிகை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

நடிகை ஈஸ்வரி ராவ்:

1990 ஆம் ஆண்டு கவிதை பாடும் அலைகள் என்று படத்தில் மூலம் ஹீரோயின் ஆன இவர்கள் தொடர்ந்து நாளைய தீர்ப்பு, ராமன் அப்துல்லா, குரு பார்வை, சிம்ம ராசி, சுந்தரியும் நீயும் சுந்தரி நானும் , அப்பு குட்டி தவசி இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

அதன் பின் குண சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த ஈஸ்வரி ராவ் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் மிகச்சிறந்த அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

அப்படித்தான் கன்னத்தில் முத்தமிட்டாய் உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

கஸ்தூரி சீரியலில் ஈஸ்வரி ராவ்:

இதனிடையே திடீரென சன் டிவியில் ஒளிபரப்பான. கஸ்தூரி சீரியலில் கதாநாயகியாக நடித்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

சினிமாவில் ஆல் அட்ரஸே இல்லாமல் போன ஈஸ்வரி ராவ் திடீரென 2018 ஆம் ஆண்டில் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக வெளிவந்த காலா திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்து அசத்தி இருந்தார்.

அதில் அவரது நடிப்பு மிக பிரமாதமாக இருந்தது குறிப்பாக ரஜினிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் நடிகை ஈஸ்வரி ராவ் இந்த அளவுக்கு பேமஸ் ஆனது போல் அவரது தங்கச்சியால் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவே முடியவில்லை .

நடிகை ஈஸ்வரியின் தங்கை:

என்னது அவர் தங்கச்சியும் நடிகையா? என்று நீங்கள் கேட்கலாம் ஆமாம். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பெரியண்ணா திரைப்படத்தில். இந்த ஒரு பாடல் மிகவும் பிரபலமான பாடல்.. எல்லோருக்கும் தெரிந்தது பாடல்.

“நிலவே நிலவே சரிகமபதநி பாடு” இந்த பாட்டில் சூர்யாவுக்கு ஜோடியாக ஆட்டம் போட்டவர் தான் கஸ்தூரியின் தங்கை மானசா.

இது தவிர இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதுதான் காக்கை சிறகினிலே. அதன் பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

அவர் ஆள் அட்ரஸே இல்லாமல் மார்க்கெட் இழந்து போனார். சினிமாவில் அவர் இப்போது இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாத அளவுக்கு அவர் காணாமல் போய்விட்டார்.

சினிமாவில் காணாமல் போன நடிகைகள்:

இப்படித்தான் நடிகைகள் எல்லோருக்கும் அதிர்ஷ்டம் வாய்ப்பதே கிடையாது. ஒரு சில நடிகைகள் தொடர்ச்சியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகையாக மாறிவிடுவார்கள்.

அவர்களுக்கு கிடைக்கும் பாத்திரங்களும் அழுத்தமான கதாபாத்திரமாக மக்களின் மனதில் பதியும் கதாபாத்திரமாக அமைகிறது.

ஆனால் ஒரு சில நடிகைகள் அறிமுகமான புதிதிலே அடையாளம் இன்றி காணாமல் போய்விடுவது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----