இதன் காரணமாக அந்த உறுப்பை அறுத்துக்கொண்டேன்.. பகீர் கிளப்பிய நடிகை மோகினி..!

திரை உலகை பொருத்த வரை புதுமுக நடிகைகளின் வரத்து அன்று முதல் இன்று வரை அதிகரித்து வரக்கூடிய வேளையில் 90-களில் தனது வித்தியாசமான கண்ணால் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மோகினி.

தமிழ் திரை உலகில் 90-களில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்த இவர் ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். தற்போது இவர் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை அனைவர் முன்னும் பகிர்ந்து கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகை மோகினி..

நடிகை மோகினி நடிப்பில் வெளி வந்த புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று சொல்லலாம். மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போதே திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் நடிகை மோகினி.

இவர் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் போது தன் வாழ்க்கையில் வேண்டாத முடிவை எடுத்துக் கொள்ள முயற்சி செய்ததாகவும், கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனை அடுத்து இயேசுவின் கிருபையால் அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

---- Advertisement ----

 அந்த உறுப்பை அறுத்துட்டேன்..

நடிகை மோகினி ஒரு காலகட்டத்தில் எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்தில் அவரை தள்ளியுள்ளது. அது மட்டும் அல்லாமல் தினமும் கெட்ட கனவுகள் வர ஆரம்பித்ததில் இதனால் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறார்.

அந்த சமயத்தில் ஒரு ஜோதிடரை சந்திக்க அவர் உங்களுக்கு செய்வினை வைத்து இருக்கிறார்கள், அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து அவரது மன அழுத்தம் மேலும் அதிகரித்து தேவையில்லாத முடிவுகளை நோக்கி மனம் சென்றதாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து என் கணவரிடம் இது பற்றி கூறியதை அடுத்து அவர் என்னை சமாதானம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என கூறினார்.

இதனை அடுத்து ஒரு சிவாச்சாரியாரை சந்தித்து செய்வினை எல்லாம் உண்மையா? என்று கேட்டதற்கு நல்லது இருக்கும் என்றால் கெட்டது இருக்கும் என்ற பதிலை அவர் தந்தார்.

பகீர்  தகவலை சொன்ன நடிகை மோகினி..

இந்த சூழ்நிலையில் தான் நான் ஜாதகம், நேரம், கர்மா இவற்றை அனைத்தையும் தாண்டிய கடவுள் யார் என தேட ஆரம்பித்த போது எனது கனவில் இயேசு கிறிஸ்து வந்தார். இயேசு கிறிஸ்துவை கண்ட நாளிலிருந்து எனக்கு கெட்ட கனவுகள் வருவதில்லை. என் உடல் நலம் பெயர் ஆரம்பித்து மனதில் நிம்மதி ஏற்பட்டது.

அப்படி நான் மன நிம்மதி இல்லாத போது என் கையை அறுத்துக் கொண்டேன்.  வாழ மனம் இல்லாத காரணத்தால் எலி மருந்தை கோக்கில் கலந்து குடிக்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டதோடு, 136 தூக்க மாத்திரைகளை அப்படியே சாப்பிட்டு விட்டேன் எனினும் என்னை இயேசு கிறிஸ்து காப்பாற்றியதாக நடிகை மோகினி பகீர் தகவலை கூறுகிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் நடிகை மோகினி செயலை கேட்டு பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது இணையத்தில் வைரலான விஷயமாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

---- Advertisement ----