ரோஜா ( Roja ) தமிழ் சினிமாவில் 2000களில், கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றிய ஒரு நடிகை. ஆர்.கே செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ தான் இவரது முதல்படம். பிரசாந்த் ஜோடியாக நடித்தார்.
முதல் படத்திலேயே ரோஜா, செம கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி, அசுரன், இந்து, ஆயுதபூஜை, என் ஆசை ராசாவே, ஊட்டி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், தமிழ் செல்வன், ராசய்யா, மக்கள் ஆட்சி, சுயம்வரம், ஏழையின் சிரிப்பில் என பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதில் பெரும்பாலும் கவர்ச்சியான நடிகையாகவே, ரோஜா வலம் வந்தார்.
குட்டையான பாவாடை, வயிறும், கழுத்தின் கீழ்பாகமும் தாராளமாக தெரியும் வகையில் சட்டை என, ரோஜா காட்டிய கவர்ச்சி, அப்போதைய ரசிகர்களை இரவு நேரங்களில் தூங்க விடாமல் தவிக்க வைத்தது.
மேலும் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், பிரசாந்த், பிரபுதேவா, மம்முட்டி என பிரபல நடிகர்களுடன் நடித்ததால், அந்த படங்களின் வெற்றி, ரோஜாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
ஒரு கட்டத்தில், இயக்குநர் செல்வமணியை காதலித்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகள் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.சினிமா நடிகையாக வலம் வந்த ரோஜா, ஒரு கட்டத்தில் ஆந்திர அரசியலில் நுழைந்தார். இவர் பிறந்தது ஆந்திர மாநிலம், சித்தூரில்தான்.
எனவே, அங்கு ஒய்.எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்து, ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் தற்போது எம்எல்ஏ வாக இருக்கிறார்,அரசியலுக்கு சென்ற பிறகு, தமிழ் சினிமாவில் ரோஜாவை காண முடியவில்லை. ஆனால், தினமும் ஆந்திராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளில், ரோஜாவை காண முடிகிறது. மேலும், அவர் தமிழகத்தில் உ.ள்ள முக்கிய கோவில்களுக்கு செல்வதால், அதுபற்றிய அப்டேட்டுகளும் டிவிகளில், சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன.
அரசியல் தலைவர்கள், கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து, தைரியமாக பேசிவரும் ரோஜா, தயவு தாட்சணயமின்றி யாரை வேண்டுமானாலும், விமர்சித்து விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில், ஆந்திர அரசியல் தெரியாமல் பேசுவதாக, ரஜினிகாந்த் இப்போது ஹீரோ அல்ல, ஜீரோ என கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இது, ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவிடம், பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து இருக்கிறாரே என கேட்டதற்கு, கிண்டலாக குலவை சத்தமிட்டு, திடுக்கிட வைத்தவர் ரோஜா.
தமிழ் சினிமாவில் நடித்த காலகட்டத்தில், செம கவர்ச்சியாக நடித்து, இளசுகளை ஏங்க வைத்தவர் ரோஜா. அந்த வகையில், நீச்சல் உடையில் அவர் நீச்சல் குளத்தில் நடித்த புகைப்படங்கள், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
என்னதான் இருந்தாலும், அந்த காலகட்டத்தில் ரோஜா செமையா இருந்து, எங்களுக்கு எல்லாம் கவர்ச்சி காட்டி அசத்தினார். அதுவும் ‘இந்து’ படத்தில், ‘சர்க்கரை வள்ளி கிழங்கு சமைஞ்சது எப்படி,’ பாட்டு எல்லாம், எங்க டீன் ஏஜ் காலத்துல, அவ்வளவு டிரண்டிங் ஆக இருந்தது, என சமூக வலைதளங்களில் ரோஜாவின் இந்த நீச்சல் உடை படங்களுக்கு, ரசிகர்களின் கமெண்டுகள் குவிந்து வருகின்றன,
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.