அதை பண்ணா தான் பார்த்திபன் விடுவாரு.. – கூச்சம் இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!

நடிகை சீதா ( Seetha ) மற்றும் பிரபல நடிகர் பார்த்திபன் ஆக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் கடந்த 1990 ஆம் ஆண்டு இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

Actress Seetha about Parthiban character

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2001-ம் ஆண்டு பார்த்திபனை விவாகரத்து செய்தார் நடிகை சீதா. அதனை தொடர்ந்த, 2009-ஆம் ஆண்டு வேலன் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகர் சதீஷ் என்பவரிடம் காதல் வயப்பட்ட நடிகை சீதா அவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த இரண்டாவது திருமணமும் நடிகை சீதாவிற்கு விவாகரத்தில் முடித்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

Actress Seetha about Parthiban character

---- Advertisement ----

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை சீதா தன்னுடைய ரகசியமான சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த 1981 ஆம் ஒன்பதாம் ஆண்டு வெளியான புதிய பாதை என்ற திரைப்படம் எனக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் மலர்ந்தது. அவரை காதலித்த பொழுது ஒவ்வொரு நாளும் எனக்குள் திரில்லிங்கான அனுபவம் ஒரு வித குதுகலமான உணர்வு எனக்குள் இருந்தது.

Actress Seetha about Parthiban character

படப்படிப்புக்கு இடைவெளியில் யாருக்கும் தெரியாமல் வெளியில் சென்று அவருக்கு போன் செய்து சில நிமிடங்கள் பேசிவிட்டு வருவேன். அதற்குள் எல்லோரும் எங்கே போன ஒரு இடத்தில் இருக்க மாட்டியா என்று கேட்பார்கள்.

ஆனால், பார்த்திபன் மிகவும் கண்டிப்பானவர். என்னை, வெளியே விட மாட்டார். குழந்தைகளுக்கு பரீட்சை இருக்கிறது அதை பார் என்று சொல்லிவிடுவார். அவர் என்னை வெளியே விட வேண்டும் என்றால் அழுது அடம் பிடித்து அவரிடம் கேட்க வேண்டும். அப்போதுதான் விடுவார்.

Actress Seetha about Parthiban character

ஆனால், அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகை சீதா. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

---- Advertisement ----