அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரம் பட நடிகை..!

திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளின் சிலர் ஓரிரு படங்களில் நடித்த பிறகு குடும்பம் குட்டி என செட்டி விடுவார்கள். அந்த வகையில் நடிகை சிந்து மேனனும் ஒருவர் என சொல்லலாம்.


இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து இருக்கிறார். ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.

நடிகை சிந்து மேனன்..

பெங்களூரில் பிறந்து வளர்ந்த சிந்துமேனன் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தம்பி கன்னட வானொலி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இளம் வயதிலேயே சிந்து மேனன் பரதநாட்டியம் கற்றவர்.

மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். 1994 ஆம் ஆண்டு ராசிமி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


அத்துடன் இவர் 1999-இல் பிரேமா பிரேமா பிரேமா என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2001-இல் உத்தமன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு சமுத்திரம் என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

--Advertisement--

2002-ஆம் ஆண்டு கடல் பூக்கள் மற்றும் யூத் என்ற தமிழ் திரைப்படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் முழு கவனத்தை செலுத்தி வந்த இவர் 2009-இல் ஈரம் என்ற தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஈரம் பட நடிகையா இது..

வீரம் படத்தில் நடித்த நடிகை சிந்து மேனனா? இது என்று கேட்கக் கூடிய அளவு தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் உள்ளது. சினிமாவில் பீக்கில் இருந்த போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகைகளில் இவரும் ஒருவர்.


சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது தன் கணவன் மற்றும் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து விட்டார்.

ஈரம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் 2003-ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.


அத்தோடு சிந்து மேனனுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் சிந்து சற்று குண்டாகி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரம் பட நடிகை..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் உண்மை தெரிய வரும். அவர் எப்படி குண்டாக குழந்தைகளோடு காட்சியளித்திருக்கிறார் என்பதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.


இதனை அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் வைத்திருக்கிறார்கள்.

இதற்கான பதிலை விரைவில் சிந்து மேனன் தருவார் என்ற ஆவலில் ரசிகர்கள் பலரும் இணையத்தை விட்டு நீங்காமல் காத்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் அதிகளவு லைக்குகளை இந்த புகைப்படம் பெரும் என நம்பலாம்.