தன்னுடைய அழகால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நடிகையான அந்த தளுக் மொழுக் நடிகை சமீபத்தில் தன்னுடைய தனிப்பட்ட தொந்தரவுக்காக பொது இடத்திற்கு வந்திருக்கிறார்.
இவரை பார்த்த அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் கேமராவை கையில் எடுத்து மேடம் மேடம் என போட்டோ எடுக்க வந்திருக்கிறார்.
முதலில் பார்த்து சிரித்த நடிகை சில நொடிகளில் ஆஹா.. மேக்கப் போடாம வந்திருக்கோமே என்று தன்னுடைய முகத்தை கைகளால் மூடியபடி நகர்ந்து சென்றுள்ளார்.
அருகில் சென்ற பத்திரிக்கையாளரிடம் நான் மேக்கப் போடல.. ப்ளீஸ் போட்டோ எடுக்காதிங்க என்று தன்னுடைய முகத்தை கைகளால் மறைத்த படியே காரில் ஏறி புயல் வேகத்தில் போயிட்டு இருக்கேன் குறுக்க தண்ணி லாரி எதுவும் வந்துட கூடாது ஆண்டவா என பறந்திருக்கிறார்.
புகைப்படம் தான் எடுக்கவில்லையே தவிர நடிகையின் இந்த செயல் குறித்து இணைய பக்கங்களில் கலாய்த்து தள்ளி வருகிறார் அந்த பத்திரிக்கையாளர்.
மேக்கப் இல்லாமல் பார்த்த போது ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டது. இதுல, இவங்களுக்கு கோயில் கட்டுறேன்.. கோபுரம் கட்டுறேன்.. சிலை வைக்கிறேன்-ன்னு சில பேர் சுத்திட்டு இருக்காங்க. அவங்கள நெனச்சா தான் பாவமா இருக்கு என்கிறார் அந்த பத்திரிக்கையாளர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.