கார்த்திக் வலையில் சிக்காத சுவலட்சுமி..! ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்..!

ஆசை திரைப்படத்தில் தல அஜித்தோடு இணைந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சுவலட்சுமி கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் 1998-ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.


சிறுவயதில் இருந்தே பல்வேறு நாட்டுப்புற நடனங்களை கற்றுக் கொண்ட இவரது நடன திறமையை பார்த்து தான் வங்காள இயக்குனர் சத்யஜித் ராய் இவருக்கு உட்டோரன் என்ற படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பை கொடுத்தார்.

நடிகை சுவலட்சுமி..

இதனை அடுத்துத்தான் இவர் ஆசை படத்தில் இயக்குனர் வசந்த் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தெலுங்கு மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கோகுலத்தில் சீதை, நிலவே வா, நீ வருவாய் என போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

நடிகை சுவலட்சுமிக்கு பல நடிகர்கள் ஐ லவ் யூ சொல்ல வரிசை கட்டி காத்திருந்தார்கள். எனினும் அவர்கள் காதல் வலையில் சிக்காமல் அவர் நேக்காக தப்பித்துச் சென்ற விஷயங்கள் உங்களுக்கு தெரியாது.


அது பற்றிய விரிவான விவரத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.பார்ப்பதற்கு அழகான வட்டமான முக அமைப்பு கொண்ட சுவலட்சுமி மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குனர் வசந்த் இயக்கிய படத்தில் நடித்து பிரபலமானார்.

---- Advertisement ----

முதல் படமே வெற்றி பெற்றதால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. ஆசை அஜித்துக்கு பின் பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக லவ் டுடே படத்தில் நடித்த சந்தியா என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்ததால் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபீஸ் கிட் அடித்தது.

ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகர்..

இதனை அடுத்து விஜய், அஜித், பிரபுதேவா கார்த்திக், சரத்குமார், முரளி என பல தமிழ் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சுவிட்சர்லாந்தில் ஆண்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனை அடுத்து அண்மை பேட்டியில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் நடிகரான பயில்வான் ரங்கநாதன் சுவலட்சுமி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதில் தமிழ் திரை படங்களில் 2000 ஆவது ஆண்டிலிருந்து பல நடிகைகள் கவர்ச்சி ஆட்டம் போடவும், குத்தாட்டம் போடவும் களம் இறங்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்காகத்தான் நடிகைகளுக்கு அதிக சம்பளமும் கொடுக்கப்பட்டது. இதனால் தான் தமிழ் பெண்கள் நடிப்புத் துறைக்கு வராமல் ஒதுங்கி சென்றார்கள்.

ஆனால் தெலுங்கு, மலையாளம், பாலிவுட் படங்களிலிருந்து அதிக கவர்ச்சி காட்டிய நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார்கள். எனினும் கவர்ச்சியை அவர்கள் காட்டினார்களே தவிர போதுமான அளவு நடிப்புத்திறனை வெளிப்படுத்தவில்லை.

கார்த்திக் வலையில் சிக்காத நடிகை..

கவர்ச்சியை காட்டினால் மட்டும் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கருதி இருந்த நடிகைகளுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் அந்த காலத்தில் சாவித்திரி, தேவிகா, பத்மினி போல சுவலட்சுமி கவர்ச்சி இல்லாமல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


அதுமட்டுமல்லாமல் நடிகை சுவலட்சுமி பல நடிகர்கள் காதலித்து காதல் வரை வீசிய போதும் அவர் காதலிக்காமல் கட்டுக்கோப்பாக வாழ்ந்தவர்.

ஒரு சமயத்தில் கார்த்திகோடு கோகுலத்தில் சீதை படத்தில் நடித்த போது கார்த்திக்கும் அவருக்கு ரூட்டு போட்டார். ஆனால் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காமல் எல்லா நடிகர்களுக்கும் நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தவர் சுபலட்சுமி என்று அவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

---- Advertisement ----