பிரசவத்திற்கு பின் ஏற்படும் அடிவயிற்றை குறைக்கும் பிரண்டை

இன்று வந்த பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. மேலும் சிசேரியன் செய்வதால் அவர்களின் வயிற்றுப்பகுதி பெருத்து விடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.அப்படி அடி வயிறு பெருத்து விட்டால் பார்ப்பதற்கு  நன்றாக இருக்காது என்று நினைக்கும் பெண்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்தி அடிவயிற்றை குறைக்க முற்படுகிறார்கள்.

முன்னோர்கள் சொன்ன பழமொழி:

கிராமப்புற பகுதிகளில் வேலியோரங்களில் பற்றிப் படர்ந்து இருக்கும் கொடி தான் பிரண்டை ஆகும்.பெற்றவள் வயிற்றில் பிரண்டையை வைத்து கட்டு என்பது  நமது முன்னோர்கள்  கூறிய பழமொழி. இந்த பழமொழி இருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பெற்றவள் வயிற்றில் வைத்து பிரண்டையை கட்டு என்று கூறுகிறார்கள் அல்லவா? 

காரணம் வேறொன்றுமில்லை இந்த குழந்தைக்கு அடிவயிற்றில் இருக்ககூடிய அதிகமான பொறுப்புகளை கரைக்கக் கூடிய சக்தி உள்ளதால் தான் இந்த பழமொழியை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

---- Advertisement ----

அடிவயிற்றை குறைக்க உதவும் பிரண்டை:

இரண்டு கையில் இருக்கக் கூடிய வேதிப் பொருட் களுக்கு கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தி இருப்பதால் பிள்ளை பெற்ற தாய்மார்கள் அவர்கள் உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அடிவயிறு  பெருக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இளம் பிரண்டையை துவையல் அரைத்து சாப்பிடுவதன் மூலம் பசியை தூண்டுவதோடு,ஜீரண சக்தியை மேன்படுத்தி கொழுப்பு சத்தை குறைக்க வல்லது.

பிரண்டையை உலர்த்தி பொடி செய்து இட்லி பொடி அல்லது பொடியோடு சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு எளிதில் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பிரண்டை பொடி தற்போது நாட்டு மருந்து கடைகளில்  கிடைப்பதால் அதனை நீங்கள் இட்லிப் பொடியுடன் மிக எளிதாக கலந்துகொண்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரண்டைக்கு நமைச்சல் தன்மை இருப்பதால் அதனை பயன்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால்  உண்ணும் போது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். மிகவும் பக்குவமாகவும் ஜாக்கிரதையாகவும் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை இளம் பிரண்டையை பயன்படுத்தினால் போதும்.

---- Advertisement ----