என்ன விசேஷம் பட்டு புடவையோட மணக்குற மல்லி சகிதமா ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வளவு சந்தோஷமா இருக்காங்க!

விஜய் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், கலைஞர் டிவியில் நடந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்தது. முதல் படமாக அட்டகத்தியில் இவர் அறிமுகமாகி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது  இவர் மோகன் தாஸ், தீயவர் குலைநடுங்க ,தி கிரேட் , துருவ நட்சத்திரம், இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகர்களுக்கு இணையாக நடிக்க வேண்டிய இவர் தாயாக  காக்கா முட்டையில் நடிக்கிறார் என்று பல விமர்சனங்கள் எழுந்த போதும் அதையெல்லாம் இவர் பொருட்படுத்தாமல் அந்த படத்தில் நடித்து  எனது திறமையை வெளியுலகுக்கு காட்டினார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் இவர் காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார். இந்த படத்தில் இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

---- Advertisement ----

மேலும் சிறந்த கதையம்சம் மற்றும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா  ராஜேஷ் போட்டோ சீட்டுகளையும் அடிக்கடி செய்து அவரின் ஸ்டாப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

தற்போது அவர் பட்டுப்புடவை அணிந்து  கை நிறைய மல்லிகைப் பூ வைத்து வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன விசேஷம் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் வீட்டில் விசேஷமா அல்லது இவருக்கு ஏதாவது விசேஷமா என்பதுபோல கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 தனி விதமான மாடர்ன் உடைகளை நடிகைகள் அணிந்து வந்தாலும் பட்டுப்புடவைக்கு என்று இருக்கின்ற கெத்து இதில் தனியாக தெரிகிறது கலாச்சாரம்  பண்பாட்டு உடையில் மிளிர்கிறது.

சொப்பன சுந்தரி என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்து வருகிறார். இந்த படத்தை பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய  சிவாத்மிகா இசையமைத்துள்ளார். நகைசுவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

---- Advertisement ----