இந்தியாவை விட்டு வெளியேறுகிறார் நடிகர் அஜித்..! – என்ன காரணம்..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சமீபகாலமாக இந்தியாவை விட்டு வெளியேறி மேலை நாடுகளில் சொந்தமாக குடியுரிமை பெற்று அங்கே கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்து செட்டில் ஆகும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரபலங்கள் மட்டுமில்லாமல் பெரும் பணக்காரர்கள் கூட இப்படி வெளிநாடுகளில் வீடு வாங்கிக்கொண்டு அங்கேயே குடியுரிமையும் பெற்றுக்கொண்டு இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் என்ற NRI அந்தஸ்தோடு இருக்க ஆசைப்படுகிறார்கள்.

இது காலம் காலமாக நடந்து வரும் கூடிய ஒரு விஷயம் தான் என்றாலும் கூட சமீபகாலமாக இப்படியாக வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக குடிப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது என்ன விஷயம் வாங்க பார்க்கலாம்

சினிமா துறையில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தானாக தனியாக போராடி இந்த அளவுக்கு முன்னணி நடிகர்களின் வரிசையில் தன்னை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும் தல அஜித் பற்றி அனைவருக்கும் கூற வேண்டிய அவசியம் இல்லை.

---- Advertisement ----

 தன்னுடைய கடுமையான உழைப்பால் திரைத் துறையில் முன்னணி கதாநாயகன் வரிசையில் இருக்கும் அஜித்குமார் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பைக் ரேஸ் மற்றும் கார் பிரியர்.

 இவர் தன்னோடு இணைந்து நடித்த ஷாலினியை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

 நடிகர் திலகம், எம்ஜிஆருக்கு பின்னால் தல அஜித் தளபதி விஜய் என்று கூறும் அளவுக்கு இவர் நடிப்பில் சிறந்து விளங்கி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை, வாலி போன்ற படங்களில் இவரின் நடிப்பு மிகச் சிறப்பான முறையில் வெளிப்பட்டது.

 இதனை தொடர்ந்து தற்போது இவர்  துணிவு என்ற படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சில நாட்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானது.

 இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க வினோத் அவர்கள் இயக்கவுள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார்.மேலும் முக்கிய நடிகர்களாக சமுத்திரக்கனி, வீரா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

தற்போது பைக்கில் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த அஜீத்  இந்திய மதிப்பில் கிட்ட தட்ட 120 கோடி மதிப்பு இருக்கக்கூடிய ஒரு வீட்டை லண்டனில் விலைக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

 தல படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டு மற்ற நாட்கள் அந்த வீட்டில் தங்கி விடுவார். எனவே லண்டனில் தல அஜித்  அந்த வீட்டுக்கு சென்றுவிட்டால்… எப்படி … என்று ரசிகர்கள் கதறி வருகிறார்கள்

.நடிகர் அஜித் மட்டும் இல்லாமல் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் லண்டனில் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் தங்களுடைய படப்பிடிப்பு இல்லாத நாட்களில் லண்டனுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

காரணம் இங்கே இவர்கள் வீட்டில் இருந்தாலும் கூட சிறையில் இருப்பது போன்ற அனுபவம் தான். காரணம் வெளியே சென்று ஒரு மக்களோடு மக்களாக கலக்கலாம் என்றால் மிகப் பெரிய சவாலான ஒரு விஷயம்.

இதனை சமீபகாலமாக பல நடிகர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். நாங்கள் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்றால் மாறுவேடத்தில் செல்ல வேண்டியிருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து எப்பொழுது கார் வெளியே வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எங்களின் மீது அவர்களுடைய ஈர்ப்பு விலைமதிக்க முடியாதது என்றாலும்.. கூட தனிப்பட்ட முறையில் ஒரு பிரபலமாக ஒரு சிறையில் இருப்பது போன்ற வாழ்க்கைதான் வாழ வேண்டி இருக்கிறது.

எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் கூட சுதந்திரமாக எங்களால் வெளியே சென்று உலவ முடிவதில்லை என்று கூறுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்து சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வரை பலரும் இந்த கருத்தை பொதுவெளியில் பேசி இருக்கிறார்கள்.

தனக்கான பொதுவழி சுதந்திரத்தை வேண்டி மட்டுமே நடிகர் அஜித் லண்டனுக்கு குடிபெயரவுள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து தங்குவார் என்றும் கூறப்படுகிறது.

என்னஇருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு லண்டனுக்கு சென்று வருவதும் லண்டனில் இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்து செல்வதற்க்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

எனினும் அவர் அவர் விருப்பம் அவருடைய சுதந்திரம் என்ற வகையில் இதனை எந்த வகையிலும் விமர்சிக்கவோ அல்லது விவாத பொருளாக்கவோ.. யாருக்கும் உரிமை கிடையாது என்பது தான் உண்மை.

---- Advertisement ----