கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட நடிகை அமலாபால் இதைத்தான் நேரம் சரியில்லை என்பார்களா?

இயக்குனர் மணிரத்தினத்தின் ஒரு படத்திலாவது நடித்து விட முடியுமா என்று மிகவும் ஆவலோடு இருக்கும் நடிகர்களும் நடிகைகளும் ஏராளமாக இருக்கும்போது தனக்கு 2011ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கைகழுவிவிட்டு இருக்கும் நடிகை அமலாபால் பார்க்கும் போது இவருக்கு நேரம் சரியில்லை.

ஏழரைச்சனி மனநிலையில்தான் இருந்திருக்கிறார் என்பது உறுதியாக தெரிகிறது. தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மொழிகளில் நடித்த அமலாபால் தற்போது தனது நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார்.

முதல் திருமணம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்தடுத்து திருமணங்களை செய்து இவரைப் பற்றி பலவிதமான கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இவர் மீது இவரது முன்னாள் காதலர்  பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திரைத்துறை சார்ந்த பிரபலங்களின் மீது பல பாலியல் குற்றங்களை கூறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது உருவாகி முடித்துவிட்ட பொன்னியின் செல்வன் மிகப்பிரம்மாண்டமான வரலாற்று காவியத்தில் இந்த அம்மணிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

---- Advertisement ----

2021ஆம் ஆண்டு அந்த வாய்ப்பு கிடைத்தது. மேலும் மணி சார் இவரை போனில் அழைத்து பேசியதாகவும் அப்போது இருந்த மனநிலையில் தான் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டதாகவும் அமலாபால் ஓபன் டாப் கொடுத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து ரசிகர்கள் இப்படி ஒரு வாழ்வு வந்ததை இவர் இப்படி சீர்குலைத்து விட்டாரே. எப்படி இப்படி செய்தார் என்று ஒரே புலம்பி வருகிறார்கள். ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமலாபால் எது யாருக்கு கிடைக்க வேண்டுமோ? அது அவர்களுக்கு ஆண்டவனால் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் அப்போது இருந்த மனநிலையில் தான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று இந்த நிமிடம் வரை எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தானாக தன் வீட்டு கதவை அதிஷ்டம் தட்டிய போதும் அதைப் பயன்படுத்தாத இவரை என்னவென்று சொல்வது.

---- Advertisement ----