அமுலு.. அமுலே.. துளி மேக்கப் இல்லாமல் நடிகை அஞ்சலியை பார்த்திருக்கிறீர்களா..?

தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.

ஆரம்ப நாட்களில் இவரது அசத்தலான நடிப்பை பார்த்து திரையுலகில் விரைவில் முன்னணி நடிகையாக வருவார் என்று பலரும் கூறினார்கள்.


எனினும் இவர் காதல் வலையில் விழுந்து அதனால் பல பட வாய்ப்புகளை இழந்து அந்த வலையில் இருந்து மீண்டு வந்து தற்போது திரைப்படங்களில் முழுமையாக நடிக்க முழு வீச்சில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடிகை அஞ்சலி..

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து ராம் இயக்கத்தில் வெளி வந்த ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கிளிம்ஸ் காட்சி சமீபத்தில் வெளி வந்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அந்தப் படத்தில் ஜீவா உடன் இணைந்து நடித்து தனது நடிப்புத் திறமையை வெகுவாக வெளிப்படுத்தியதை அடுத்து சிறந்த நடிகையாக ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

--Advertisement--


இதனை அடுத்து இவரது நடிப்புத் திறனை புரிந்து கொண்ட பலரும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளை அள்ளித் தந்தார்கள். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த அங்காடி தெரு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அத்தோடு இவர் மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தந்திருக்கும் போஸ்..

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் மிகத் திறமையான நடிகைகளில் ஒருவர் என்ற பெயரை குறுகிய காலத்திலேயே பெற்றவர்.

எனினும் நடிகர் ஜெயுடன் ஏற்பட்ட காதலை அடுத்து லிவ்விங் டூகதர் முறையில் வாழ்ந்து வந்த இவர் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்ததை அடுத்து வாய்ப்புக்கள் குறைந்தது.


இதனை அடுத்து நடிகர் ஜெய் குடிப்பழக்கத்தால் தடம் மாறியதை அடுத்து அவரை விட்டு பிரிந்து மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த இவர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடியதை அடுத்து ஜெயம் ரவியோடு சகலகலா வல்லவன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அமலு..அமுலே.. ரசிகர்களின் கொஞ்சல்..

இதனைத் தொடர்ந்து இவர் திரைப்படம் மட்டும் அல்லாமல் வெப் சீரியல்களில் நடிக்கக்கூடிய ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில் ஃபால் என்ற வெப் சீரியலில் நடித்த இருக்கக் கூடிய இவர் தெலுங்கிலும் வெப் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் இவர் மேக்கப் இல்லாமல் காட்சி தந்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதோடு சமூக வலைத் தளங்கள் முழுவதும் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சுடிதாரில் நேச்சர் பியூட்டி ஆக இருக்கிறார்.


இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மேக்கப் இல்லைனாலும் அஞ்சலி பார்ப்பதற்கு தேவதை போல் இருக்காங்க.. என்ற கமெண்ட்ஸ் அதிக அளவு வந்துள்ளார்கள்.

இதனை அடுத்து நடிகை அஞ்சலியை அம்முலு குட்டி என்ற ரீதியில் ரசிகர்கள் கொஞ்சி வருவதோடு இப்படியே சென்றால் இவரது திரை வாழ்க்கை சூடு பிடித்து விரைவில் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த சுடிதார் அணிந்த சொர்க்கம் ஷாலில் இளசுகளின் இதயங்களை அள்ளி முடிந்து விட்டது என்று சில ரசிகர்கள் கவித்துவமான வர்ணனைகளை செய்து வருகிறார்கள்.