விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான KPY என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சசிகலா.
KPY என்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த இவர் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட KPY சசிகலா பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் பேசிய அவர், அறந்தாங்கி நிஷா மிகவும் தைரியமானவர். பழைய ஜோக்குகளை சொல்லியே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் எனக்கு சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், அவர்களிடம் பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று கேட்டார்கள்.
அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நான் அதற்கு முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன்.
படுத்து பிழைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார் KPY சசிகலா.
சமீப காலமாக சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசி வரும் நிலையில் தொலைக்காட்சி பிரபலங்களும் இப்படியான விஷயங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்பது இவருடைய பேட்டியின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.