பிரமாண்ட படத்தில் நிராகரிப்பு செய்யப்பட்ட அரவிந்த்சாமி..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக அழகான நடிகர்களில் முக்கியமானவர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கத்தில்,. ரோஜா படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே, சிறந்த, அழகான நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அடுத்து பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்து, பிரபல நாயகனாக வலம் வந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,.இந்தி மொழி படங்களிலும் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து கம்பீரமாக வழங்கி, பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ் படங்களில் இரண்டாவது ரவுண்டாக ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், போகன் படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச் சிவந்த வானம், தலைவி ஆகிய படங்களில், தனது நடிப்பு திறனை அசத்தலாக வெளிப்படுத்தினார்.

ஆனால், அதன்பிறகு தமிழ் படங்களில் அவரை காணவில்லை. குறிப்பாக மணிரத்னம் இயக்கிய ரோஜா, பம்பாய், இந்திரா படங்களின் நாயகன் அரவிந்த் சாமி. ஆனால், மணிரத்னத்தின் மிக முக்கியமான படமான பொன்னியின் செல்வன் படத்தில், அரவி்ந்த் சாமிக்கு நடிப்பு வாய்ப்பு வழங்காதது ஏன், என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.

ராஜ வம்சத்து முக தோற்றமும், அழகும், கம்பீரமும் நிறைந்த அரவி்ந்த் சாமிக்கு நல்ல கேரக்டர் வழங்கி இருக்கலாம். அது இன்னும் படத்தின் பெருமைக்கும், புகழுக்கும் சிீறப்பை தந்திருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

--Advertisement--

ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காதது குறித்து அரவி்ந்த் சாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மணிரத்னமும் பேசவில்லை என்றாலும், ரசிகர்களுக்குதான் அது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.