5 வயதில் என் அப்பா என் கண் முன்பு இந்த அசிங்கத்தை செய்தார்.. தபு கூறிய பகீர் தகவல்..!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகை தபு. இவர் ஹிந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்த அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 52 வயதாகும் நடிகை தபு தற்போது வரை அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வருகிறார்.

பாலிவுட் நடிகை தபு:

இவர் சிறந்த நடிகைக்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஏழு பிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடும் தக்கது.

ஹைதராபாத்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை தபு வின் தந்தை பாகிஸ்தானை சேர்ந்த நடிகராக இருந்து வந்தார்.

---- Advertisement ----

தன்னுடைய மூன்று வயதாக இருக்கும் போதே தந்தையை பிரிந்து தாயுடன் இந்தியாவிற்கு வந்துவிட்டார் நடிகை தபு.

இதுவரை ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை என்பதையும் தாண்டி பிரபலமான மாடல் அழகியாகவும் இருந்து வந்தார் நடிகை தபு. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக சினிமாவில் நடிகையாக பயணித்து வருகிறார் நடிகை தபு.

தமிழ் படங்கள்:

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உறுமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இங்கு புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார் .

குறிப்பாக அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் இன்று வரை அது பலரது ஃபேவரைட் திரைப்படம் ஆகவும் இருந்து வருகிறது.

இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் பரவலாக அறியப்பட்ட நடிகையாக இருந்து வருகிறார். காதல் தேசம் திரைப்படமும் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இரண்டு ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காதலிக்கும் நாயகியாக தபு அந்த திரைப்படத்தில் நடித்த அசத்தி இருந்தார்.

காதல் தோல்வி:

இதுவரை கிட்டத்தட்ட மூன்று காதல் தோல்விகளை சந்தித்திருக்கும் நடிகை தபு தனது வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து தற்போது வரை சிங்கிளாக தான் இருந்து வருகிறார்.

அவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனா மற்றும் பிரபல பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆன அஜய் தேவ்கான் உள்ளிட்டோரை உருகி உருகி காதலித்து பின்னர் அவர்களால் ஏமாற்றப்பட்டார்.

தற்போது நடிகை தபு குறித்த பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பாவின் அருவருப்பான செயல்:

தபு திருமணம் செய்யாமல் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் அதாவது சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் எனக்கு கூறி இருக்கிறார் .

அதாவது தபுவின் அப்பா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் தபுவின் அப்பா.

அவ்வப்போது தபுவின் தந்தை, மனைவி மற்றும் மகள்கள் முன்பே இரண்டாம் மனைவியுடன் ஜோடியாக சுற்றுவது ரொமான்ஸ் செய்வது உள்ளிட்டவற்றை செய்து அவர்களை வெறுப்பேற்றுவது போல் நடந்து கொண்டிருக்கிறார்.

இதனால் தப்புக்கு தனது அவரது அப்பா ஒரு சைக்கோ போல தெரிந்திருக்கிறார். இந்த செயல் தனது மகள்களுக்கு மிகுந்த மனவேதனை கொடுக்கிறது என்பதை அறிந்து கொண்ட தபுவின் தாயார் மகள்களை அழைத்துக் கொண்டு மும்பையில் குடிபெயர்ந்தார்.

தபுவின் சகோதரிக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அவர் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தபுவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க இங்கு நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

---- Advertisement ----