என்ன கன்றாவி இது..? – பிளாஸ்டிக் சர்ஜரி செய்து.. விகாரமாக மாறிய அதுல்யா ரவி..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை அதுல்யா ரவி ( Athulya Ravi ) தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடியதோ இல்லையோ..? சமூக வலைதளங்களில் நூறு நாளை தாண்டியும் ஓடியது.

இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர். நல்ல குடும்பப்பாங்கான, பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற முகம். தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.அதனைத் தொடர்ந்து ஏமாளி என்ற படத்தில் நடித்தார் அம்மணி. இந்த படத்தில், கவர்ச்சி கடையை விரித்தார்.

அதனை தொடர்ந்து, நாடோடிகள் 2படத்தில் நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினை விட சமுத்திரகனி பேசிய அரசியல் தான் பிரதானமாக தெரிந்தது.இந்த படத்திற்கு எதற்கு நாடோடிகள் 2 என தலைப்பு வைத்தார்கள் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த படம் அதுல்யா ரவியின் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

சமீபத்தில், ஜெய்யுடன் கேப்மாரி திரைப்படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்து இளசுகளின் சூட்டை கிளப்பினார், அதனால் அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் ரசிகர்களிடம் குறைந்து கொண்டே போகிறது.இந்நிலையில், தெலுங்கு சினிமா இயக்குனர்கள் சிலர் அதுல்யாவை அக்கட தேசத்துக்கு பேக் செய்து கொண்டு விரும்புகிறார்களாம்.

தமிழ் படங்களுக்கு நிகராக, தெலுங்கு பட வாய்புகள் அம்மணியின் கதவை தட்டுகிறதாம்.ஆனால், தெலுங்கு படம் என்றாலே அறிமுகமாகும் படங்களில் ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சிம்ரன், நயன்தாரா, திரிஷா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் ஆனதற்கு காரணம் அவர்கள் ஆரம்பத்தில் நடித்த தெலுங்கு படங்களை பார்த்தால் தெரியும்.ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சி தூக்கலாக காட்டியிருப்பார்கள்.

---- Advertisement ----

அதே போல, அதுல்யாவையும் ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சி கதாபாதிரங்களில் நடிக்க இயக்குனர்கள் அழைக்கிறார்கலாம். ஆனால், அதுல்யாவோ.. நடிக்கிறேன் என்றும் கூறாமல் நடிக்க மாட்டேன் என்றும் கூறாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான முருங்கை காய் சிப்ஸ் படத்தில் முறுக்கி முறுக்கி கவர்ச்சி காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டு கிளாமருக்கு எந்த தடையும் இல்லை என்று அறிவித்தார் அம்மணி.

நிலைமை இப்படி இருக்க, தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் விகாரமாக மாறியுள்ளார் அம்மணி. இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அதுல்யா ரவியா இது..? நம்பவே முடியலையே.. என்று புலம்பி வருகிறார்கள்.]

---- Advertisement ----