எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா..? – அட்லீயை வார்ன் செய்த ஷாருக்கான்..! – இது தான் காரணமாம்..!

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு மிகச் சிறந்த இயக்குனராக திரை உலகில் வெளிப்படுத்திய அட்லீ [Atlee] தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மிகச்சிறந்த இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து தமிழில் தளபதி விஜய் உடன் இணைந்து சில படங்களை தந்திருக்கும் இவர் அந்த படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் கிட் அடித்த படங்களாக மாறி விட, எப்போது இந்த இரண்டு நபர்களும் இணைந்து திரைப்படம் செய்வார்கள் என்ற எண்ணத்தை கிளப்பி விடக் கூடிய நிலையில் உள்ளது.

Atlee
Atlee

இந்நிலையில் இயக்குனர் அட்லீ, ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிவு பெற்ற தருவாயில் திரைப்படம் எப்போது வெளிவரும் என்று தெரியாமல் தற்போது கிடப்பில் போடப்பட்ட பொருளாகிவிட்டது.

மேலும் பதான் படத்தில் மாபெரும் வெற்றியை தந்த ஷாருக்கான் கட்டாயம் அடுத்த ஒரு படத்தை தந்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால் இந்த படம் வெளிவந்தால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தார்.

எனினும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, விளம்பரங்களும் பெரிய எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட நிலையில் இந்த படம் எப்போது வெளிவரும் என்பதில் அதிக அக்கறை காட்டாமல் இயக்குனர் அட்லீ இருப்பதாகவும், மேலும் படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் இவர் பொது இடங்களில் பேசுவதே இல்லை என்ற விஷயங்களும் தற்போது பூதாகரமாக வெளியே வந்து விட்டது.

---- Advertisement ----

Atlee
Atlee

அட்லீ-க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சம்பளம் கொடுக்கல் வாங்களில் எதோ தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஜவான் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் எதிலும் கவனம் செலுத்தாமல் இருக்கும் இயக்குனர் அட்லீயை ஷாருக் கான் எச்சரித்து உள்ளதாகவும், மேலும் அவர் மீது பயங்கர காண்டில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

எனவே இந்தப் படத்தை எப்படியாவது சீக்கிரம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் அட்லீக்கு ஷாருக் கான் வார்னிங் செய்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

Atlee
Atlee

இந்த விவகாரம்  முற்றுப்பெற்று இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வருமா? இல்லை அப்படியே முடங்குமா? என்பது அட்லீ வாய் திறந்தால் மட்டுமே வெளிவரும். எனவே அனைவரும் இதை பொறுத்திருந்து பார்ப்பதின் மூலம் தான் பதில் நமக்கு கிடைக்கும்.

---- Advertisement ----