ஷீத்தல் காதலன் பப்லூவை கழட்டி விட்ட காரணம்..!! – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த நடிகர் ப்ரித்விராஜ். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காரணத்தால் தான் பப்லு என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

சினிமாக்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு 54 வயதான நிலையில் 24 வயது ஆன ஷீத்தல் என்ற இளம் பெண்ணோடு லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தார்.

இதனை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவ இவர் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தனக்கு பொம்பள சோக்கு கேக்குது என்று அருவருக்கத் தக்க கூடிய வகையில் பேசி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் பப்லு, ஷீத்தலை கப் கேக் என்று செல்லமாக அழைப்பதும் கைகளை நீட்டியபடி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து ப்ரபோஸ் செய்வது போல உள்ள நெருக்கமான புகைப்படங்களை வலை தளத்தில் வெளியிடுவார். இந்நிலையில் இவர்கள் இருவருமே மலேசியாவில் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.

மேலும் அண்மையில் பப்லு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பதிவிட அதில் இவரது காதலி ஷீத்தல் இல்லை. அது போல இவரது காதலியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரித்விராஜ் உடன் இணைந்து இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாத்தையும் டெலிட் செய்ததின் காரணத்தால் இவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டது என்ற தகவல்கள் வெளி வந்தது.

--Advertisement--

இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட பிரேக்கப்புக்கு காரணம் என்ன என்று இணையமே மண்டையைப் பிய்த்துக்கொண்ட காரணத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இந்த விடையை பயில்வான் அண்மை பேட்டியில் போட்டு உடைத்தார். சுமார் 7 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ப்ரித்விராஜ் திருமணத்தை தள்ளி போட்டே வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வெறும் அந்த ஆசைக்கு மட்டுமே ஷீத்தலை பப்லு பயன்படுத்திக் கொண்டதாகவும், திருமண உறவு ஷீத்தல் உடன் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக பப்லு இருந்திருக்கிறார்.

மேலும் திருமண உறவில் லாக் ஆகிவிட்டால் அதிகளவு கமிட்மெண்டுகள் வந்துவிடும் என்பதால் சுயநலமாக சைக்கோ போல நடந்து கொண்ட ப்ரித்விராஜ், ஷீத்தலை பிரிந்துவிட்டார்.

இது தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் 54 வயதில் ஓவராக ஆடிய பப்லுவுக்கு இதை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாமல் தற்போது சைலன்டாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதர் கூறியிருக்கிறார்.