கல்லூரி தோழனுடன் பிரபல இயக்குனரின் மனைவி கள்ளக்காதல்..! - புட்டு புட்டு வைத்த நடிகர்..!

கல்லூரி தோழனுடன் பிரபல இயக்குனரின் மனைவி கள்ளக்காதல்..! – புட்டு புட்டு வைத்த நடிகர்..!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்ற பாலா பழனிச்சாமி என்கிற பாலா தமிழ் திரையுலகில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் திரைப்பட கலை பற்றி பயின்றவர்.

இவர் இயக்கும் படங்கள் முழுவதுமே வித்தியாசமான கதைக்களத்தோடு இருக்கும். இவர் பி ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இயக்குனர் பாலா..

நடிகர் பாலாவின் படத்தில் நடித்து விட்டால் திரை உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விடலாம் என்ற வகையில் சியான் விக்ரமாக சேது படத்தில் நடித்த விக்ரம் பாலாவின் படத்தை அடுத்து தான் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார்.


அது போலவே வாரிசு நடிகரான சூர்யா எந்த படத்தில் தனது நடிப்புத் திறன் சரியாக ஜொலிக்காத காரணத்தை அடுத்து நந்தா என்ற படத்தில் நடிக்க அதை பாலா இயக்க தற்போது திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

மேலும் பாலா இயக்கிய பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்கள் ஒவ்வொன்றும் தமிழ் ரசிகர்கள் இருக்கும் வரை அவர் பெயரை சொல்லும் வகையில் உள்ளது.

--Advertisement--

பாலாவின் மனைவி..

இயக்குனர் பாலா முத்து மலர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 18 ஆண்டு காலமாக திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தற்போது ஏற்பட்டிருக்கும் கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.


இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதனை புட்டு புட்டு வைத்த நடிகர் பிரபலம் பயில்வான் முத்து மலர் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

கள்ளக்காதலில் மனைவி..

இயக்குனர் பாலாவின் மனைவி கல்லூரி தோழனுடன் நெருக்கத்தில் இருந்த காரணத்தால் தான் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விட்டது என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

மேலும் பாலாவிடம் இருந்த கெட்ட பழக்கங்களால் பாலாவை விட்டு விலக முடிவு செய்த முத்துமலர் கல்லூரியில் படிக்கும் காலம் முதற்கொண்டு பிரபல அரசியல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மகனை காதலித்து வந்திருக்கிறார்.

மேலும் பாலா உடன் ஏற்பட்ட திருமண பந்தம் ஒத்து வராத காரணத்தால் தனது முன்னாள் காதலனுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வந்த விஷயம் பாலாவுக்கு தெரிய வந்ததை அடுத்து குடும்பத்தில் பிரச்சனை வெடித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த இயக்குனர் பாலா குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணத்தால் தான் பணக்கார வீட்டுப் பெண்ணான முத்து மலரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகும் இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவதோடு மட்டுமல்லாமல் இதன் காரணத்தினாலேயே பல நேரங்களில் வீட்டுக்கு வராமல் இயக்குனர் பாலா ஆபீஸில் இருந்து விடுவார்.

எனவே மண வாழ்க்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளாத இயக்குனர் பாலா முத்து மலர் மீது துளி அளவும் பாசம் காட்டாததால் மனம் உடைந்து போன முத்துமலர் தனது முன்னாள் காதலனோடு வாழ முடிவு செய்ததை அடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதன் மூலம் 18 ஆண்டு திருமண பந்த வாழ்க்கை முற்றுப்பெற்றது என்ற நிலையையும், கல்லூரி தோழனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் பயில்வான் ரங்கநாதர்.