புடவை விஷயத்துல நான் ரொம்ப கஞ்சம்.. நடிகை பாப்ரி கோஷ் சொன்னதை கேட்டீங்களா..?

சினிமாவில் சீரியலில் நடிப்பவர்கள் எல்லாம் மிக அதிகளவில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள், மிகவும் ஆடம்பரமாக வாழ்வார்கள், குறிப்பாக நடிகைகள் பலரும் புடவைகள், நகைகள், ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக பணத்தை செலவழிப்பார்கள் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கிறது.

ஆடம்பர வாழ்க்கை

ஆனால், உண்மையில் சினிமாவில் மற்றும் சீரியலில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் மிக எளிமையான வாழ்க்கைக்கு பழகியவர்கள். மிகவும் சிக்கனமாக இருப்பவர்கள்.

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையிலும் கூட அவர்களது வாழ்க்கையில் செலவினம் என்பது மிக மிக குறைவாகவும், தேவைக்கேற்ற வகையில் எளிமையாகவும் இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவர்கள்.

பாப்ரி கேஷ்

இதற்கு உண்மையான உதாரணமாக இருப்பவர் நடிகை பாப்ரி கோஸ். டிவி சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் பெங்காலி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

சினிமாவில் சில ரோல்களில்…

சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதேபோல் பெட்ரோமாக்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

பரதன் இயக்கிய விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் 2017ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக பாபி கோஸ் நடித்திருந்தார்.

மேலும் சர்கார் என்ற விஜய் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம், சக்க போடு போடு ராஜா, ஓய் போன்ற படங்களிலும் பாபி கோஸ் நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடித்து பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார் பாப்ரி கோஷ்.

நாயகி, பாண்டவர் இல்லம்

நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தைப்போல, அருவி, சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட பல சீரியல்களில் பாப்ரி கோஷ் நடித்தவர் என்பது குறிப்பிடப்பட்டது.

புடவை விஷயத்தில்..

சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை பாப்ரி கோஷ் கூறியதாவது,

புடவை விஷயத்தில் நான் ரொம்ப ரொம்ப கஞ்சத்தனமானவள். நாயகி சீரியலில் நான் 100 ரூபாய் ஸாரி எல்லாம் நான் கட்டியிருக்கேன். பாண்டவர் இல்லம் சீரியலில் பணக்கார பெண்ணாக காட்டினார்கள்.

1000 ரூபாய்க்குள்தான்…

சரி, மனசே இல்லாமல் மனசை தேற்றிக்கொண்டு 200 ரூபாய், 300 ரூபாய் புடவை, அதற்கு மேல் ரொம்ப நல்ல புடவையாக பட்டுப் புடவை போல கட்ட வேண்டும் என்றால், 500 ரூபாய், 600 ரூபாய், இறுதியாக 1000 ரூபாய் வரைக்கும், சேலை வாங்கி கட்டியிருக்கிறேன்.

எப்பவும் 1000 ரூபாய்க்கு கீழே தான் புடவை வாங்குவேன். அதற்கு கீழே உள்ளது எதுவோ அதுதான். 1000 ரூபாய்க்கு மேல் எல்லாம் எப்போதுமே போனதில்லை.

கண்மணி ஸாரிஸ் சூப்பர்

அந்த 100 ரூபாய் ஸாரி எல்லாம் கட்டுவதற்கு நன்றாக இருக்கும். பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கும். இப்படி கம்மி விலையில் ஸாரி கட்டும் போதுதான், நிறைய லைக்ஸ் வந்தது. கண்மணி ஸாரிஸ் சூப்பர் சூப்பர் என்று கமெண்டுகள் வந்துக்கொண்டே இருந்தது என்று கூறியிருக்கிறார் பாப்ரி கோஷ்.

புடவை விஷயத்துல நான் ரொம்ப கஞ்சம். 100 ரூபாய் புடவை கட்டியவள் நான் என்று நடிகை பாப்ரி கோஷ் வெளிப்படையாக சொன்னதை கேட்டு ரசிகர்கள் மலைத்துப் போய் விட்டனர்.

---- Advertisement ----