ஒரே விடுதியில் விஜய், கீர்த்தி சுரேஷ்..! இரவு இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்..! ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

ஒரே விடுதியில், ஒரே விஜய், கீர்த்தி சுரேஷ்..! இரவு இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்..! ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை தற்போது தவிர்க்க முடியாத உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

இன்று தமிழக அரசியலில் தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நபராக இவர் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்பட்டு வருவது உங்கள் அனைவருக்குமே மிக நன்றாக தெரியும்.

விடுதியில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்..

திரையுலகை பொருத்தவரை விஜயின் அப்பா ஒரு இயக்குனர் என்பதும் கீர்த்தி சுரேஷின் அப்பா தயாரிப்பாளர் மற்றும் அவரது அம்மா மேனகா மிகச்சிறந்த மலையாள நடிகை என்பது அனைவருக்கும் தெரியும்.


அந்த வகையில் சினிமாவை பின்புலமாக கொண்ட இவர்கள் இருவரும் எளிதில் சினிமா வாய்ப்பை பெற்றிருந்தாலும் படிப்படியாக திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்கள்.

நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் ஊடகங்களில் எழுந்து வந்த நிலையில் தற்போது பிரபல நடிகரும் திரை விமர்சகரும் கூறி இருக்கும் கருத்துக்கள் பரவலாக பேசப்படக்கூடிய வகையில் உள்ளது.

இரவு நேர டிஸ்கஷன்..

இதனை அடுத்து கோட் படத்தின் படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரி விடுதியில் தங்கி இருந்த விஜய் பற்றி பிரபல நடிகர் கூறிய விஷயங்கள் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் பாண்டிச்சேரியில் இருந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பும் பாண்டிச்சேரியில் நடந்துள்ளது.


இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்குவதற்கு பாண்டிச்சேரியில் ஒரு மிகப்பெரிய லாட்ஜில் ரூம் புக் செய்யப்பட்டு உள்ளது. சந்துரு என்பவர் இயக்கக்கூடிய படமாக ரிவால்வர் ரீட்டா இருந்தது.

இதனை அடுத்து இருவருக்குமே ஒரே லாட்ஜில் ரூம் புக் செய்யப்பட்டு இருந்த நிலையில் இரவு நேரத்தில் கீர்த்தி சுரேஷ் விஜயின் ரூமுக்கு சென்றிருக்கிறார்.

ரகசியம் உடைத்த பிரபலம்..

குறிப்பாக இரவு 11:30 மணி அளவில் கீர்த்தி சுரேஷ் விஜய்யின் ரூமுக்கு சென்றதை அடுத்து இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக டிஸ்கஷன் நடந்துள்ளது.

இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த அனைவருமே கீர்த்தி சுரேஷ் விஜயின் ரூமில் இருக்கிறார் என்று தம்பட்டம் அடித்து விட்டார்கள். அந்த விஷயத்தை தான் தற்போது நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என கூறி இருக்கிறார் என பிரபல நடிகர் கூறினார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அப்படி என்ன டிஸ்கஷன் அந்த நேரத்தில் என்று வம்படியாக நக்கல் செய்து வருகிறார்கள்.


ஏற்கனவே லியோ படத்தில் கலவை ரீதியான விமர்சனம் பெற்ற நடிகர் விஜய் கோட் படத்தில் வெற்றியை தக்க வைத்துக் கொள்வாரா? என்பது திரைப்படம் வெளி வந்த பிறகு தான் தெரிய வரும்.

அது போலவே கீர்த்தி சுரேஷுக்கும் சொல்லிக் கொடும்படியான படங்கள் ஏதும் இல்லாத நிலையில் தற்போது கிடைத்திருக்கும் பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு திரை உலகில் நிலைத்து நிற்பாரா? என்பதும் விரைவில் தெரிந்து விடும்.

மேலும் தற்போது இணையத்தில் ரகசியம் உடைத்த பிரபல நடிகர் பயில்வான் ரங்க நாதனின் பேச்சானது பேசும் பொருளாகி விட்டதோடு ஒரே விடுதியில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் அதுவும் 2 மணி நேரம் டிஸ்கஷனா? என்ற ரீதியில் அனைவரும் கிசுகிசுத்து வருகிறார்கள்.

தலைவா.. அரசியலுக்கு வரக்கூடிய சமயத்தில் இது போன்ற அரசல், புரசலான பேச்சுக்கள் எழும்.. இருந்தாலும் நீங்க மெர்சலா உங்கள் செயல பாக்கணும் என்று ரசிகர்கள் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

வீடியோவுக்கு நன்றி – Madras Movie