“தொழில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க..!” – லாபம் தரும் மாவிளக்கு பரிகாரம்..!

வாழ்க்கையில் எப்படியும் முன்னேற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள் அவர்களாகவே சொந்தமாக தொழிலை செய்து முன்னேற நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க சில பரிகாரங்கள் உள்ளது.

 அதில் குறிப்பாக மாவிளக்கு பரிகாரத்தை செய்வதின் மூலம் உங்கள் தொழிலில் ஏற்பட்டு இருக்கக்கூடிய தொடர் நஷ்டத்தை ஈடு கட்டி விரைவில் லட்சாதிபதி ஆகக்கூடிய யோகத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட மாவிளக்கு பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லாபத்தை அள்ளித்தரும் மாவிளக்கு பரிகாரம்

இந்த பரிகாரத்தை தொழில் நடக்கக்கூடிய இடங்களில் மட்டுமே செய்ய வேண்டும் மேலும் இந்த பரிகாரம் அம்மனுக்கு உகந்த பரிகாரம் என்பதால் குறிப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் இதை செய்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற லாபங்கள் வந்து சேரும்.

இந்த பரிகாரத்தைச் செய்ய பச்சரிசி மாவை இடித்து அதில் வெல்லம், ஏலம் சேர்த்து உருண்டையாக பிடித்து அதன் பிறகு அதில் நடுவே குழித்து நெய்யை ஊற்றி பஞ்சிணை  திரியாக வைத்து விளக்கினை ஏற்ற வேண்டும்.

இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த மாவிளக்கில் நீங்கள் ஐந்து திரிகளை உபயோகித்து ஐந்து முகமாக ஏற்றுவது உஜிதமானது. மேலும் இந்த விளக்கினை நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் கடவுளின் பாதத்தில் வைத்து வாழை இலையை போட்டு அதன் மேல் இரண்டு மா விளக்குகளாக வைக்க வேண்டும்.

---- Advertisement ----

இதனோடு நீங்கள் வெற்றிலை மற்றும் பாக்கினை சேர்த்து வைத்து தேங்காய் பழம் உடைத்து வெள்ளிக்கிழமை வழிபடுவதோடு தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் இதுபோல செய்வதின் மூலம் உங்கள் தொழிலில் ஏற்படுகின்ற நஷ்டம் எல்லாம் நீங்கி நல்ல லாபம் கிடைக்கும்.

இதனைக் கண்டிப்பாக நீங்கள் முயற்சி செய்து  பாருங்கள். கண்டிப்பாக ஒரு கடையில் நீங்கள் தொழில் செய்து வந்தால் உங்களுக்கு வளர்ச்சி ஏற்பட்டு இரண்டு கடைகளுக்கு முதலாளி ஆகக்கூடிய யோகம் கிட்டும்.

---- Advertisement ----