“பீரியட்ஸ் நேரத்தில் பெட்டில் படுக்கும் போது..” ஷிவாங்கி குறித்து அம்மா Binni Krishnakumar பேச்சு..!

விஜய் டிவி வளரும் கலைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக உள்ளது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.


சூப்பர் சிங்கர் கலந்து கொண்ட ஷிவாங்கி இதனை அடுத்து குக் வித் கோமாளி எனும் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

சிடபிள்யூசி ஷிவாங்கி..

பொதுவாகவே விஜய் டிவியில் போட்டியாளராக பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனோடு தான் படத்தில் நடித்திருக்கிறார்.

மலையாளி என்றாலும் தமிழில் பின்னணி பாடல்களை பாடி வரும் இவர் பசங்க எனும் திரைப்படத்தில் முதல் பாடலை பாடி அசத்தினார்.

--Advertisement--

அன்பாலே அழகாகும் என்ற பாடலை பாடி பல்வேறு ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பாடக்கூடிய வாய்ப்புகளும் கிடைத்தது.


மேலும் 2021-ஆம் ஆண்டு சிவாங்கி தரண் குமாரோடு இணைந்து அஸ் குமாரே என்ற பாடலை பாடினார். இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடலாக வந்தது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பாடல்களை பாடி இருக்கும் இவர் முருங்கக்காய் சிப்ஸ் எனும் திரைப்படத்தில் டாக் லெஸ் ஒர்க் மோர் எனும் பாடலை பாடி அசத்தினார்.

பீரியட் நேரத்தில் பெட்டில் படுக்கும் போது..

மேலும் 2021-இல் ஓணம் சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்ட அடிபொலி எனும் பாடலை வினீத் சீனிவாசனோடு இணைந்து பாடி ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.

இந்நிலையில் தற்போது ஷிவாங்கி குறித்து அம்மா பின்னி கிருஷ்ணகுமார் பேசிய பேசியது இணையங்களின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


ஷிவாங்கி குறித்து அம்மா பேச்சு..

அந்த பேச்சில் அவர் தன்னுடைய காலத்தில் பீரியட்ஸ் நேரத்தில் பெட்டில் படுக்கும் போது படுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். அது போல எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள முடியாது. அப்படியான ஒரு சூழ்நிலையை என்னுடைய மகளுக்கு வரக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்து வருகிறேன்.

அத்தோடு படப்பிடிப்பு இருக்கும் போது அவள் உடல்நலம் குறைவாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேமரா முன்பு மிகவும் ஆரோக்கியமாக இருப்பது போலவும், நல்ல புத்துணர்வோடு இருப்பது போலவும் நடித்துக் கொடுப்பாள்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த அடுத்த நிமிடமே வந்து தனக்கான ஓய்வு எடுத்துக் கொள்வார். சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டி இருக்கும்.

இப்படி பல்வேறு வலிகளை தாங்கிக் கொண்டு தான் என் மகள் திரையில் தோன்றுகிறார் என்று cwc ஷிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதில் அவர் அம்மா கூறிய விஷயம் ஆழமாக பதிந்து குழந்தையின் அருமை தாய்க்கு எந்த அளவு புரிந்துள்ளது.

எனவே தான் தாய்மையை பற்றி இதனால் தான் பலரும் சிறப்பாக கூறுகிறார்கள் என்ற கருத்தை சொல்லி வருகிறார்கள்.