“குண்டு மாங்காய்.. எச்சில் ஊறுதே..” – சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்ட புகைப்படம் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருப்பவர் பிரவீனா. விஜய்டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சந்தியாவை அதிகம் திட்டி ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்குபவர் மாமியார் சிவகாமி. 

 

இவரது நிஜப்பெயர் பிரவீனா நாயர். கேரள மாநிலம் செங்கணசேரியில் பிறந்தவர். இவரது அப்பா கல்லூரி பேராசிரியர். பிரவீனா 18 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். 

---- Advertisement ----

 

முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற படம் மூலம் அறிமுகமானார். தூர்தஷன் நிகழ்ச்சியான ஸ்வப்த ஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.

 

 

இந்த சீரியல் பரபரப்பாக ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க பிரவீனா பற்றி ஒரு பரபரப்பான தகவல் கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. அவர் அரசியலில் குதிக்கப்போகிறார் என்றும், விரைவில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் அல்லது கொல்லம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார் என்றும் தகவல் பரவியது. 

 

 

ஆனால் அது பற்றி கட்சி தலைமை அல்லது நடிகையின் தரப்பு என யாருமே அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என கூறி பிரவீனா விளக்கம் கொடுத்திருக்கிறார். 

 

அரசியலில் நுழைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில் அவரது விளக்கம் வந்திருக்கிறது. 

 

 

“எனக்கு இப்படி ஒரு செய்தி பரவுகிறது என்று கூட தெரியாது. நான் அரசியலில் இல்லை. அரசியல் என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது. என்னை அரசியலுக்கு கொண்டு வந்த நபருக்கு நன்றி” என பிரவீனா விளக்கம் கொடுத்துள்ளார்.இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருடன் திருமணம் ஆனது. 

 

ப்ரமோத் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜர் ஆவார். இந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆவார். கௌரி என்ற மகள் பிறந்தார்.அது மட்டும்மல்லாமல் இவர் ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினர். தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீவித்யா. நடிகை பிரவீனா சின்னத்திரை, பெரியத்திரை இரண்டிலும் பலவிதமான ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார்.

 

இந்நிலையில், தன்னுடைய தோட்டத்தில் உள்ள மா மரத்தில் இருந்து மாங்காய் பறிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளார்.

---- Advertisement ----