“மொரட்டு கட்ட…” ஐந்து புலன்களின் அழகி.. – பிக்பாஸ் சம்யுக்தா வேற லெவல் கிளாமர்..!

 

பிரபல இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பிக்பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. 

 

மாடலிங்கில் புகழ் பெற்று விளங்கும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சம்யுக்தா, சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பதாக தெரியவில்லை என்றாலும் இந்த படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

---- Advertisement ----

 

இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் சம்யுக்தா, சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமந்த் இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இந்நிறுவனத்தின் ஐந்தாவது திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்த படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின் ஹைதராபாத், பெங்களூர் ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானவர் சம்யுக்தா. 

 

 

மேலும் இவர் மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட், யோகா கலைஞர் என பல துறைகளில் வெற்றி பெண்ணாக வலம் வந்தவர் என்பது முக்கியமாகும்.மேலும் பிக்பாஸில் கிடைத்த புகழினால் தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அத்தோடு விஜய்டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். 

 

 

இந்நிலையில் சம்யுக்தா தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அந்த வகையில், வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு இருக்கும் படி கிளாமராக புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி. 

 

இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. ஐந்து புலன்களின் அழகி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----