“டீ-சர்ட்டை ப்ராவாக மாற்றி..” – அதகளம் பண்ணும் நிவேதா பெத்துராஜ்..! – குஷியில் தயாரிப்பாளர்கள்..!

 

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 

 

பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்திலும் தீவிரமாக இயங்கி வருகிறார். 

---- Advertisement ----

 

நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது சோர்வடைய வைக்கிறது. சீரியசான கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். 

 

ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.கமர்சியல் நாயகியாக மாறினால்தான் குறும்புத்தனமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் எனவும், அதுதான் மிகவும் சுவாரசியமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 

 

இதைக் கேள்விப்பட்ட அக்கடதேச தயாரிப்பாளர்கள் தற்போது நிவேதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பணம் பெட்டியுடன் கிளம்ப ஆரம்பித்து விட்டனர்.

 

பார்ப்பதற்கே மப்பும் மந்தாரமாக இருக்கும் நிவேதா பெத்துராஜை எப்படியாவது கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டுகொண்டிருந்த தயாரிப்பாளர்கள் பலரும் இப்போது அதற்கு நேரம் கனிந்து வந்துள்ளதால் அட்வான்ஸ் கொடுக்க அதிகாலையிலேயே சென்று விடுகிறார்களாம். 

 

இனி விரைவில் தெலுங்கில் மசாலா நாயகியாக நிவேதா பெத்துராஜை பார்க்கலாம்.

---- Advertisement ----