தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அறிமுகம் ஆகி குறைந்த நாட்களிலேயே பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் அதிக வாய்ப்பையும் வரவேற்பையும் பெற்றவராக நடிகை ஸ்ரேயா தன்வந்தரி இருக்கிறார்.
ஸ்ரேயா தன்வந்திரி 1988இல் ஹைதராபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் ஹிந்தி மற்றும் தெலுங்கு பேசும் குடும்பமாகும். இதனாலேயே ஹிந்தி மற்றும் தெலுங்கு இரண்டு சினிமாவிலும் அவர் கால் பதித்துள்ளார் என்று கூறலாம்.
கல்லூரி சமயத்திலேயே ஈடுபாடு:
அவரது தாய் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவராகவும், அவரது தந்தை ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவராகவும் உள்ளனர். 2008 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் கல்லூரி படிக்கும் போதே கலந்து கொண்டார் ஸ்ரேயா தன்வந்திரி.
அவருக்கு அப்பொழுதிலிருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்த வருடமே ஜோஸ் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் இவர் நடித்தார். அதனை தொடர்ந்து சினேக கீதம் என்கிற தெலுங்கு படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
---- Advertisement ----
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் ஸ்ரேயா தன்வந்தரி. இதற்கு நடுவே நிறைய டிவி சீரிஸ் களிலும் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த பெரும்பாலான டிவி சீரியல்கள் இந்திய அளவில் நல்ல வெற்றியைக் கண்டுள்ளன என கூறலாம்.
டிவி சீரிஸ்களில் வாய்ப்பு:
த ஃபேமிலி மேன், ஸ்கேம் 1992, மும்பை டயரிஸ் போன்ற சீரிஸ்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். தற்சமயம் ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூறலாம். தமிழில் இதுவரை எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை என்றாலும் கூட இவர் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஹிந்தி சினிமாவில் இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு நடிகை இவ்வளவு அதிகமான வாய்ப்புகளை பெற முடியாது ஏனெனில் ஹிந்தி சினிமாவில் நடிப்பு துறையில் இருந்து வரும் பிரபலங்களின் வாரிசுகளுக்குதான் அதிக வரவேற்பு உண்டு என்ற பேச்சுக்கள் உண்டு.
தனிப்பட்ட நடிப்பு:
அப்படி எல்லாம் இருந்தும் கூட இவர் தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக இவ்வளவு வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியிடும் ஸ்ரேயா தன்வந்திரி தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. கொசுமலை மாதிரி இருக்கும் இந்த ஆடையில் அவர் இன்னமும் அழகாக இருப்பதாக தெரிகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகியும் வருகிறது.